செய்திகள் :

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை - கயிற்றால் கட்டி, வனத்துறையிடம் ஒப்படைத்த சிங்கப்பெண்!

post image

நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை

பெண்கள் சில நேரங்களில் எதையும் எதிர்த்து போராடும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பவர். எதாவது ஆபத்து வரும் போதுதான் அவர்களின் துணிச்சல் வெளியில் தெரிய வரும்.

பல பெண்கள் தங்களது குழந்தைகளை பாதுகாக்க சிறுத்தையை எதிர்த்து போராடி இருக்கின்றனர். ராஜஸ்தானில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

கட்டிப்போடப்பட்ட சிறுத்தை
கட்டிப்போடப்பட்ட சிறுத்தை

உதைப்பூரில் வசிக்கும் சுசித்ரா என்ற பெண்ணின் வீட்டிற்குள் இரவில் சிறுத்தை ஒன்று நுழைந்துவிட்டது. வீட்டிற்குள் தனியாக இருந்த பெண் சுசித்ரா சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் சிறுத்தையை கண்டு அச்சம் அடையாமல் சிறுத்தையை எதிர்த்து போராடினார்.

அவர் சிறுத்தையுடன் போராடி அதனை கயிற்றால் கட்டிப்போட்டார். சிறுத்தையில் காலில் கயிற்றை கட்டி வீட்டில் கட்டி வைத்தார்.

சிறுத்தை கயிற்றை இழுத்துக்கொண்டு வெளியில் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகப் பரவியது.

அப்பெண் கயிற்றால் சிறுத்தையைக் கட்டிப்போட்டுவிட்டு வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தார். அவர்கள் வந்து சிறுத்தையைப் பத்திரமாக அழைத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.

சிறுத்தை
சிறுத்தை

அப்பெண்ணின் துணிச்சலான செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி இருக்கின்றனர்.

ஒருவர் தனது பதிவில், "மிகவும் துணிச்சலான பெண்" என்று புகழ்ந்திருக்கிறார். மற்றொருவர் "சிறப்பான பணி" என்றும், "வேறு யாராவது அதனை வீட்டிற்கு வெளியில் பார்த்திருந்தால் கொன்றிருப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் "சாதாரணப் பெண்களின் சக்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் தனது பதிவில், "தவறான வீட்டிற்குள் அது நுழைந்துவிட்டது" என்று சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.

மற்றொருவர் தனது பதிவில், "சிறுத்தையைக் கயிற்றால் கட்டிப்போட்ட பெண்ணின் கணவர் நிலையை நினைத்துப் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பலரும் அப்பெண் எப்படி அமைதியாகவும், துணிச்சலுடனும் நிலைமையைக் கையாண்டார் என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே ராஜஸ்தானில் வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த சிறுத்தைக்குப் பெண் ஒருவர் ராக்கி கயிறு கட்டினார்.

குஜராத்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக ஏரியில் குதித்த வாலிபர்கள்; விபரீதத்தில் முடிந்த தற்கொலை நாடகம்

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகில் உள்ள நர்திபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது விபரீதத்தில் முடிந்துள்ளது. தற்போது தசரா என்பதால் நள்ளிரவு வரை தாண்டியா நடனம் நடை... மேலும் பார்க்க

சென்னை: தி.நகரில் 1.2 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் திறப்பு; பயணிகள் வரவேற்பு | Photo Album

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்! மேலும் பார்க்க

காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்: சிறுவனுக்கு சிறிய கதவு வழியாக உணவு - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சீனாவில், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார ஐடிகள் தொடர்பான கடுமையான விதிகள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளுடன் பிடிபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்... மேலும் பார்க்க

கூட்டத்தை விட்டு எப்போது வெளியேற வேண்டும்? - அபாயத்தைத் தவிர்க்க, உயிர் காக்கும் எச்சரிக்கைகள்!

கரூர் சம்பவத்தையொட்டி, தவெக தலைவர் விஜய்யை ஆரம்பித்து, ஆளும் கட்சியினரை, வேடிக்கைப் பார்க்கச் சென்ற மக்களை என அனைவரையும் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். இந்த சம்பவத்தில் இருந்து ந... மேலும் பார்க்க

54 மணிநேரம் உயிர் போராட்டம்; கிணற்றில் தவறுதலாக விழுந்த பெண் பிழைத்தது எப்படி?

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு பழைய கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் தவறுகளாக 48 வயதான பெண் ஒருவர் விழுந்திருக்கிறார். கிட்டத்தட்ட 54 மணி நேரத்திற்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.சவுத் சைன... மேலும் பார்க்க

நிம்மதி தராத ரூ.4 கோடி சேமிப்பு: சிக்கன வாழ்க்கையால் வருந்தும் 67 வயது முதியவர்

இன்றைய உலகில் பணம் வாழ்க்கைக்கு ஒரு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்று ஜப்பானை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் உணர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.சிக்கனமான வாழ்க்கை ... மேலும் பார்க்க