செய்திகள் :

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

post image

பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிலிப்பின்ஸ் நாட்டின் செபு மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி, செவ்வாய்க்கிழமை இரவு 7.29 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் போகோ நகரை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இடிபாடுகளில் காயங்களுடன் நூற்றுக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். செபு மாகாணத்தில் பல்வேறு நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், சற்றுநேரத்தில் திரும்பப் பெறப்பட்டது.

செபு மாகாணம் டான்பன்டயன் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற மிகப் பழமையான தேவாலயமும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளது.

உலகில் பேரழிவு ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றான பிலிப்பின்ஸ், கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. மேலும், பிலிப்பின்ஸ் நாட்டை ஆண்டுக்கு சுமார் 20 புயல்கள் தாக்குகின்றது.

Powerful earthquake hits Philippines : 27 dead

இதையும் படிக்க : அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்

பள்ளிக் கட்டட விபத்து இந்தோனேசியாவில் 3 போ் உயிரிழப்பு; 38 போ் மாயம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள சிடோா்ஜோ நகரில், இஸ்லாமிய பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 38 போ் மாயமாகியுள்ளனா். இது குறித்து உள்ளூா் ஊடகங்கள் கூறியதாவது: சிடோா்ஜோ... மேலும் பார்க்க

சரக்குக் கப்பலில் ஹூதிக்கள் மீண்டும் தாக்குதல்: 2 போ் காயம்

ஏடன் வளைகுடா வழியாகச் சென்றுகொண்டிருந்த, நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலில் 2 மாலுமிகள் காயமடைந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகை... மேலும் பார்க்க

டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டம் இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிச... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். ஹெச்-1பி விசா கட்டணத... மேலும் பார்க்க

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 - 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!

இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காஸாவுக்கு 3 - 4 நாள்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசமாக அளித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸின் ஆயுதக் குறைப்... மேலும் பார்க்க

வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் ... மேலும் பார்க்க