செய்திகள் :

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

post image

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை, அவர்கள் ஏற்காத நமது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா, இன்று (அக். 1) தில்லியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு நிறைவு செய்ததை குறிக்கும் விதமாக ரூ.100 நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார்.

இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயம், அவர்கள் ஏற்காத இந்திய அரசியலமைப்பிற்கு ஒரு பெரிய காயம் மற்றும் அவமதிக்கும் செயல் ஆகும்.

அவர்களது பிரிவிணைக் கருத்தான இந்துத்துவ ராஷ்ட்ரத்தின் அடையாளமாக அவர்கள் ஊக்குவிக்கும் மாறுபட்ட பாரத மாதா படத்தை அதிகாரப்பூர்வ நாணயத்தில் அச்சிடுவது மிகவும் ஆட்சேபனைக்குரியது.

1963 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு நாள் பேரணியில், சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடம்பெற்றுள்ளது போல் அஞ்சல் தலையில் அச்சிட்டுள்ளது பொய்யான வரலாறு.

இது, இந்தியா - சீனா இடையிலான போரின்போது அந்த அமைப்பு வெளிப்படுத்திய தேசபக்தியை அங்கீகரிக்க, அப்போதைய பிரதமர் நேரு 1963 குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தார் எனும் பொய்யை அடிப்படையாகக் கொண்டது.

சுதந்திரப் போராட்டத்தில் விலகி இருந்து, பிரிட்டனின் பிரித்தாளும் உத்திகளை வலுப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெட்கக்கேடான பங்கை மூடிமறைக்கும் செயல்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, பிரதமர் மோடி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவிணைவாதக் கொள்கைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

The Communist Party of India (Marxist) has condemned the commemorative coin and postage stamp issued to mark the centenary of the RSS, saying it is an act of insulting our Constitution.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

தில்லியிலுள்ள பள்ளிக் கல்வித் திட்டத்தில் ராஷ்ட்ரநீதி என்ற பெயரில் ராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) பற்றியும் அதன் பங்களிப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்தும் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என ... மேலும் பார்க்க

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவிப்பு!

அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1,01,603 கோடி வரி பங்கீட்டுத் தொகையை விடுவித்து மத்திய அரசு இன்று (அக். 1) அறிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் தான் மட்டுமே பதவி வகிப்பேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்ற... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வ... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

இலங்கையின் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து, விடுதலை செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரும், 53 நாள்கள் கழித்து காக்கிநாடா திரும்பியுள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின், காக்கிநாடா மாவட்டத... மேலும் பார்க்க