செய்திகள் :

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீசார்; காரணம் என்ன?

post image

கடந்த அக்டோபர்  27ஆம்  தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை விஜய்யோ அல்லது தவெக நிர்வாகிகளோ சென்று சந்திக்காதது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

காவல்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கரூர் தவெக மாவட்டச் செயலாளர், பொருளாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மருத்துவமனை
கரூர் மருத்துவமனை

மேலும் சில தவெக தலைமை நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் குறித்த வழக்கில் முன் ஜாமீன் வேண்டி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துக்களைப் பதிவிட்டதாகவும், அதனை நீக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீசார் சென்றிருக்கின்றனர். அதாவது தவெக ஐடிவிங்கில் உள்ள கரூர் சம்பவம் தொடர்பான வீடியோக்களை பறிமுதல் செய்வதற்காக ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

Bihar SIR: ``65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்" - தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியானது

பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை மேற்கொண்டது.இதற்கு பீகார் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி... மேலும் பார்க்க

காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?

ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது.இஸ்ரேல் - காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், ... மேலும் பார்க்க

கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?" - தமிழிசை காட்டம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமி... மேலும் பார்க்க

கரூர் நெரிசல்: 'கலவரத்தை ஏற்படுத்து நோக்கத்துடன்' - ஆதவ் அர்ஜுனா மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு?

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து பெருந்துயரம் ஏற்பட்டது.இந்தச்... மேலும் பார்க்க

கரூர்: "EPS உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து உளறுகிறார்" - தங்கம் தென்னரசு காட்டம்

கரூரில் நடந்த கொடுந்துயர் தொடர்பாக அரசு கொடுத்துள்ள விளக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.அதற்குப் பதில் கருத்தாக நிதியமைச்சர் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

கரூர்: மருத்துவமனைக்குச் சென்றது முதல் மின்தடை வரை - விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க