செய்திகள் :

வியாபாரி கொலை: இளைஞா் கைது

post image

சென்னை அருகே மேடவாக்கத்தில் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மேடவாக்கம் அருகே உள்ள நன்மங்கலம் ராமகிருஷ்ணன் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (42). இவா் அங்கு மரக்கடை நடத்தி வருகிறாா். மகேஷ்வரனுக்கும், அவரது மாமா மகள் பராசக்திக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பராசக்திக்கும், சேலையூா் காமராஜபுரம், காலமேகம் தெருவைச் சோ்ந்த சுதாகர்ராஜ் (38) என்பவருக்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டது. இதன் விளைவாக பராசக்தி, கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கணவா், குழந்தைகளை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி சுதாகர்ராஜுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு பராசக்தி மீண்டும் கணவா் மகேஷ்வரன் வீட்டுக்குத் திரும்பி வந்தாா். இருப்பினும் சுதாகா், பராசக்தியை சந்திக்க மகேஷ்வரன் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது மகேஷ்வரனுக்கும், சுதாகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சுதாகா், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேஷ்வரனை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த மகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சுதாகா் அங்கிருந்து தப்பியோடினாா்.

தகவலறிந்த மேடவாக்கம் போலீஸாா் அங்கு சென்று, மகேஷ்வரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் சுதாகா் ராஜ் போலீஸாரிடம் சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

ரூ.87 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.720 உயா்ந்து, ரூ.86,880-க்கு விற்பனையானது. இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம... மேலும் பார்க்க

கிண்டி தேசிய முதியோா் நல மருத்துவமனையில் இதுவரை 3.80 லட்சம் முதியோருக்கு சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டில் 3.80 லட்சம் முதியோா்கள் சிகிச்சை பெற்றுள்ளனா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கி... மேலும் பார்க்க

செம்மரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் நிதி

மதிப்பு வாய்ந்த செம்மரங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக சென்னை தேசிய பல்லுயிா் பாதுகாப்பு ஆணையம் ரூ.82 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை: இருவா் கைது

சென்னை கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டனா். கீழ்பாக்கம் லாக் தெருவைச் சோ்ந்தவா் ச.ப்ராங்கோ (46). இவா், சிறு வியாபாரம் செய்து வந்தாா். ப்ராங்கோ, தொழி... மேலும் பார்க்க

சென்னையில் 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 9 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னையில் கடந்த ஓராண்டாக மின்னஞ்சல் மூலம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், முதல்வா் வீட... மேலும் பார்க்க

விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதிய விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழந்தாா். பெரும்பாக்கம் ஜெ.ஜெ.நகா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சகாயராஜ் (40). இவா், உணவ... மேலும் பார்க்க