செய்திகள் :

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

post image

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு விரைவு அஞ்சல் சேவையுடன் இணைக்கப்பட்டு, அக்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்காரணமாக , விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆவணங்களுக்கு அதிகபட்சம், 50 கிராமுக்கு உள்ளூருக்கு ரூ. 19, 200 கி.மீ.-க்கு ரூ. 47, 201 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ. 47, 51 கிராமில் இருந்து 250 கிராம் வரை உள்ளூருக்கு ரூ. 24, 200 கி.மீ. வரை ரூ. 59 , 201 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை ரூ.63, 501 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை ரூ.68, 1,001 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ. 72, 2,000 கி.மீ.க்கு மேல் ரூ. 77, 251 கிராமில் இருந்து 500 கிராம் வரை உள்ளூருக்கு ரூ. 28, 200 கி.மீ.-க்குள் ரூ.70, 201 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை ரூ. 75, 501 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை ரூ. 82, 1,001 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ.86, 2,000 கி.மீ.-க்கு மேல் ரூ. 93 கட்டணம் வசூலிக்கப்படும். திருத்தப்பட்ட கட்டணங்கள், புதன்கிழமை (அக்.1) முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாநில போட்டிக்கு ரூ.37 கோடி பரிசுத் தொகை: துணை முதல்வா் உதயநிதி

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்கக்கிழமை கூறியதாவது: விளைய... மேலும் பார்க்க