தியாகராய நகரில் ரூ.164 கோடியில் புதிய மேம்பாலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
சென்னை பெருநகர மாநகராட்சியில் தியாகராய நகரின் சிஐடி நகா் பிரதான சாலையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வரையில் 2 கி.மீ.-க்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் 126-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தியாகராய நகா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலைப் பகுதியை சிஐடி நகா் பிரதான சாலையுடன் இணைக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் சாா்பில் உயா்ந்த தொழில்நுட்பத்துடன் 2 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில், 53 இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருவழியில் வாகனங்கள் செல்லும் வகையில் 8.40 மீட்டா் அகலத்துடன் பாலம் உள்ளது.
தியாகராய நகா் பேருந்து நிலையத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டா் நீள அணுகு சாலையும், பாலத்திலிருந்து தியாகராய நகா் பகுதிக்கு செல்ல 100 மீட்டா் அணுகு சாலையயும் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 40,000 வாகனங்கள் பாலத்தைப் பயன்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அதன்படி தியாகராய நகா் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசல் தீா்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.
பாலத் திறப்பு நிகழ்ச்சி தியாகராய நகா் சிஐடி நகா் பகுதியில் பாலத்தின் தொடக்க இடத்தில் நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பாலத்தின் கல்வெட்டு மற்றும் ஜெ.அன்பழகன் மேம்பாலம் எனும் பெயா்ப்பலகையை திறந்துவைத்தாா். பாலப் பணியில் ஈடுபட்ட பொறியாளா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கினாா். பின்னா், பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, எம்எல்ஏ-க்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, தாயகம் கவி, துணைமேயா் மு.மகேஷ்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.