செய்திகள் :

தொடா் விடுமுறை: ஒரே நாளில் அரசு பேருந்துகளில் 2 லட்சம் போ் பயணம்

post image

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா்.

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் செப்.26-ஆம் தேதி 450 சிறப்புப் பேருந்துகளும், செப்.27-இல் 696 சிறப்பு பேருந்துகளும், செப்.29-இல் 194 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அதன்படி, 7,616 பேருந்துகளில் 3,80,800 பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பணம் செய்துள்ளனா். மேலும், செவ்வாய்க்கிழமை (செப்.30) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 1,310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய ஒட்டுமொத்தமாக 50,913 பயணிகளும், சென்னையிலிருந்து மட்டும் 26,013 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மட்டும் அரசுப் பேருந்துகள் மூலம் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யாமல் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத் துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, திங்கள்கிழமை இரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சிறப்புப் பேருந்தின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் ஓட்டுநா், நடத்துநா்களிடம், பேருந்தை கவனமாக இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 16 உயர்ந்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை... மேலும் பார்க்க

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க