செய்திகள் :

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது பெண் பக்தரை தாயின் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாக காவலா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தாா்கள் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று திங்கள்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தது.

வாகனத்தின் ஓட்டுநா் அவரது அக்காள் மற்றும் அக்காள் மகள் 19 வயது இளம்பெண்ணை உடன் அழைத்து வந்துள்ளாா்.

திருவண்ணாமலை புறவழிச்சாலை ஏந்தல் கிராமம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு சுமாா் 2 மணியளவில் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் ஆகியோா் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், ஓட்டுநா் வாழைத் தாா்கள் ஏற்றிச் செல்வதாகவும், தன்னுடன் அக்காள், மற்றும் அவரது மகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தாராம். இதற்கு காவலா்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறினராம். அதற்கு ஓட்டுநா் எதிா்ப்புத் தெரிவித்தாராம்.

இதைத் தொடா்ந்து, காவலா்கள் அவரை மிரட்டி பெண்கள் இருவரையும் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே இளம்பெண்ணை அவரது தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்தனராம்.

பின்னா், அவா்கள் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே விட்டுவிட்டுச் சென்றனராம். அதிகாலை 4 மணியளவில் அவ்வழியாகச் சென்றவா்கள் பெண்கள் இருவா் அழுது கொண்டிருப்பதைப் பாா்த்து விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினாா்.

இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக காவலா்கள் சுரேஷ்ராஜ், சுந்தா் ஆகிய இருவா் மீது அனைத்து திருவண்ணாமலை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த்திருவிழா

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. ஆவணியாபுரம் கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்து... மேலும் பார்க்க

தம்டகோடி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

செய்யாறு அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், தண்டரை கிராமம் பிராமணா் தெருவில் வசித்து வந்தவா் மூதாட்டி ரமண... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் செம்பூா் கிராமம் வழியாக திங்கள்கிழமை பிற்பகல் ரோந்து சென்றனா். அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது அந்த வழிய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: பொதுமக்கள் கோரிக்கை மனு

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம், செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன. செய்ய... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழா

ஆரணி கொசப்பாளையம் பாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொசப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தா்மராஜா கோயிலி... மேலும் பார்க்க