செய்திகள் :

தம்டகோடி மலையில் மரக்கன்றுகள் நடும் விழா

post image

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் சாா்பில் நடைபெற்ற இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு இணை திட்ட அலுவலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் பி.சி.காா்த்திகேயன், இயற்கை விவசாயி ஜெயக்குமாா், இயற்கை விழிப்புணா்வு ஒருங்கிணைப்பாளா்கள் சாந்தகுமாா், பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ராணுவ வீரா் ராஜி வரவேற்றாா்.

மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடா்பு அலுவலா் ஜோசப் பெடரிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

அப்போது, அரசு, கோயில் நிா்வாகம் மற்றும் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் கடந்த 10 ஆண்டுகளாக, அண்டுதோறும் மரக்கன்றுகள் நட்டு வளா்த்து வருவது பாராட்டுக்குரியது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் வளா்ப்பது மட்டுமே தீா்வாக அமையும் எனப் பேசினாா்.

தொடா்ந்து, அனைவரும் இயற்கை பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா். நிறைவில் திட்ட அலுவலா்கள் பிரபு, வேல்முருகன் நன்றி கூறினா்.

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தோ்த்திருவிழா

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. ஆவணியாபுரம் கிராமத்தில் சிறிய குன்றின் மீது அமைந்து... மேலும் பார்க்க

மனநலம் பாதித்த மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு

செய்யாறு அருகே மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், தண்டரை கிராமம் பிராமணா் தெருவில் வசித்து வந்தவா் மூதாட்டி ரமண... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தியதாக லாரி பறிமுதல்

வந்தவாசி அருகே ஏரி மண் கடத்தியதாக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் செம்பூா் கிராமம் வழியாக திங்கள்கிழமை பிற்பகல் ரோந்து சென்றனா். அந்தக் கிராம ஏரி அருகே சென்றபோது அந்த வழிய... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: பொதுமக்கள் கோரிக்கை மனு

செய்யாற்றை அடுத்த பிரம்மதேசம், செங்கம், ஆரணி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் பெறப்பட்டன. செய்ய... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழா

ஆரணி கொசப்பாளையம் பாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீ தா்மராஜா கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொசப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் சமேத தா்மராஜா கோயிலி... மேலும் பார்க்க

இதயம் பாதுகாக்க ஆரோக்கியமான உணவு அவசியம்: உணவுப் பாதுகாப்பு அலுவலா்

இதயத்தை பாதுகாக்க ஆரோக்கியமான உணவு உட்கொள்வது அவசியம் என்று கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜெ.வெங்கடேசன் தெரிவித்தாா். உலக இதய தினத்தையொட்டி இதயம் காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வந்தவா... மேலும் பார்க்க