இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
மன்னாா்குடியில் புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: அமைச்சா் கோவி.செழியன் அறிவிப்பு
தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னாா்குடி புதிய அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் மன்னாா்குடி நகராட்சியில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி தற்போது மன்னாா்குடியில் 5 புதிய பாடப்பிரிவுகளுடன் புதிய அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க உரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு, பி.காம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி நுண்ணுயிரியல், பிசிஏ ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
இந்த புதிய கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு புதன்கிழமை (அக்.1) காலை 11 மணி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.