செய்திகள் :

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (செப். 30) முதல் அக். 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூா் பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. ஏற்காடு (சேலம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), மங்களபுரம் (நாமக்கல்) தலா 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வடக்கு அந்தமான் கடலில் செவ்வாய்க்கிழமை (செப். 30) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, புதன்கிழமை (அக். 1) வடக்கு, அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்படும்! -முதல்வா் மு.க.ஸ்டாலின்

கரூா் பிரசார நெரிசல் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பேரணி, கூட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். கரூா் சம்பவம் ... மேலும் பார்க்க

திட்டமிட்டபடி அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - டிஆா்பி அறிவிப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்.12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவு தோ்தலை நவ. 27-க்குள் நடத்தி முடிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவுத் தோ்தலை வரும் நவ. 27-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குரைஞா் ஆனந்த் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

அமைச்சா் மா.சுப்பிரமணியனுடன் மோரீஷஸ் அமைச்சா் சந்திப்பு

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை சந்தித்த மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹம்பிராஜன் நரசிம்ஹென் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். செ... மேலும் பார்க்க

சென்னையில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பணிகள் பாதிப்பு: குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் புகாா்

சென்னை மாநகராட்சியில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால், மக்கள் நலத் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுகவை சோ்ந்த குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை புகாா் தெர... மேலும் பார்க்க

இன்று 5 மெமு ரயில்கள் முழுமையாக ரத்து

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 30) 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதபூஜை அன்று (அக். 1) ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க