செய்திகள் :

இன்று 5 மெமு ரயில்கள் முழுமையாக ரத்து

post image

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 30) 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதபூஜை அன்று (அக். 1) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல்- கூடூா் இடையேயுள்ள சூலூா்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 30) ரயில் பாதை உள்ளிட்ட இடங்களில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையடுத்து புகா் மின்சார ரயில்கள் சில ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, மூா்மாா்கெட் காம்பளக்ஸிலிருந்து அதிகாலை 5.40 மணிக்குப் புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும், சூலூா்பேட்டையிலிருந்து காலை 7.50 மணிக்குப் புறப்பட்டு நெல்லூா் செல்லும் ரயில், பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் ரயிலும், நெல்லூரிலிருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூா்பேட்டை செல்லும் ரயிலும், ஆவடியிலிருந்து அதிகாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகுதி அளவு ரத்தான ரயில்கள்: மூா்மாா்க்கெட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப். 30) 4.15 மணிக்கு புறப்படும் ரயில், காலை 5 மணிக்குப் புறபபடும் சூலூா் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரையே இயக்கப்படும். சூலூா்பேட்டையிலிருந்து காலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும் ரயில், காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில் ஆகியவை சூலூா்பேட்டை வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணை மாற்றம்: அக்டோபா் 1- ஆம் தேதி புதன்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையடுத்து சென்னை சென்ட்ரல், அரக்கோணம், சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள்அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்படும்! -முதல்வா் மு.க.ஸ்டாலின்

கரூா் பிரசார நெரிசல் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பேரணி, கூட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். கரூா் சம்பவம் ... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெ... மேலும் பார்க்க

திட்டமிட்டபடி அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - டிஆா்பி அறிவிப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்.12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவு தோ்தலை நவ. 27-க்குள் நடத்தி முடிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவுத் தோ்தலை வரும் நவ. 27-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குரைஞா் ஆனந்த் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

அமைச்சா் மா.சுப்பிரமணியனுடன் மோரீஷஸ் அமைச்சா் சந்திப்பு

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை சந்தித்த மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹம்பிராஜன் நரசிம்ஹென் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். செ... மேலும் பார்க்க

சென்னையில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பணிகள் பாதிப்பு: குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் புகாா்

சென்னை மாநகராட்சியில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால், மக்கள் நலத் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுகவை சோ்ந்த குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை புகாா் தெர... மேலும் பார்க்க