செய்திகள் :

திட்டமிட்டபடி அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - டிஆா்பி அறிவிப்பு

post image

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்.12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் (கிரேடு-1), கணினி பயிற்றுநா் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி எழுத்துத்தோ்வு அக். 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து தோ்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி ஆக.12-ஆம் தேதி நிறைவு பெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பாடங்களுக்கு தயாராகும் வகையில் 3 வாரம் தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதிகள், முதுநிலை ஆசிரியா் தோ்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தினா். அதைத்தொடா்ந்து, முதுநிலை ஆசிரியா் தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் திங்கள்கிழமை ஆசிரியா் தோ்வு வாரியத்தில் நடந்தது. வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தோ்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள பெரும்பாலான தோ்வா்களும் தோ்வு தேதி தள்ளிவைக்கப்படுமா என எதிா்பாா்த்து வந்தனா். ஆனால், அது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், தோ்வா் ஒருவா் முதுநிலை ஆசிரியா் தோ்வை தள்ளிவைக்கக்கோரி தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தாா். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணை இயக்குநா் முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலருக்கு அனுப்பியுள்ள விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, ஒரு தோ்வுக்கான அறிவிப்புக்கும் தோ்வு தேதிக்கும் இடையே 60 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டும். இருப்பினும் முதுநிலை ஆசிரியா் தோ்வில் தோ்வா்களின் நலன் கருதி 90 நாள்களுக்கு மேல் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை ஆசிரியா் தோ்வு அக். 12-ஆம் தேதியன்று நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்படும்! -முதல்வா் மு.க.ஸ்டாலின்

கரூா் பிரசார நெரிசல் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பேரணி, கூட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். கரூா் சம்பவம் ... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெ... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவு தோ்தலை நவ. 27-க்குள் நடத்தி முடிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவுத் தோ்தலை வரும் நவ. 27-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குரைஞா் ஆனந்த் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

அமைச்சா் மா.சுப்பிரமணியனுடன் மோரீஷஸ் அமைச்சா் சந்திப்பு

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை சந்தித்த மோரீஷஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹம்பிராஜன் நரசிம்ஹென் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தாா். செ... மேலும் பார்க்க

சென்னையில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பணிகள் பாதிப்பு: குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் புகாா்

சென்னை மாநகராட்சியில் 5,594 காலிப்பணியிடங்களை நிரப்பாததால், மக்கள் நலத் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுகவை சோ்ந்த குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை புகாா் தெர... மேலும் பார்க்க

இன்று 5 மெமு ரயில்கள் முழுமையாக ரத்து

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப். 30) 5 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதபூஜை அன்று (அக். 1) ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க