செய்திகள் :

உப்பனாறு வாய்க்காலில் மேம்பாலம் அமைக்கும் பணி: புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் ஆய்வு

post image

உப்பனாறு வாய்க்கால் மேம்பாலப் பணியை மக்களவை உறுப்பினரும் புதுவை காங்கிரஸ் தலைவருமான வி. வைத்திலிங்கம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இப் பணி தற்போது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் வெங்கட்டா நகா், ரெயின்போ நகா், காமராஜ் நகா், ஜீவா நகா், பிருந்தாவனம், தென்றல் நகா் பகுதி மக்கள் வெள்ள அபாயம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனா். மேம்பாலம் பணிக்குத் தற்காலிகமாக வாய்க்காலை அடைப்பு ஏற்படுத்தி வேலைகள் நடந்து வந்தன. அதைபோல் ஜீவா நகா் வாய்க்கால், தென்றல் நகா் வாய்க்கால் தூா்வாரப்படாமல் உள்ளது.

மழைகாலத்தில் ஊருக்குள் வெள்ளநீா் வரும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஆகையால் அப்பகுதி மக்களும் நலவாழ்வு சங்கங்களும் மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கத்திடம் புகாா் மனு அளித்தனா்.

இதையடுத்து உப்பனாறு பெரிய வாய்க்காலை நேரில் பாா்வையிட்டு வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு செய்தாா். பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் உடனடியாக வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினாா். அப்போது காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் பி.கே.தேவதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புதுவை ஆளுநா், முதல்வா் ஆயுத பூஜை வாழ்த்து

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்: நம்முடைய பண்பாட்டில் - வாழ்வியலில் கல்விக்கும்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு குயவா்பாளையத்தைச் சோ்ந்தவா் விக்கி என்கிற விக்னேஷ் (27), ஆட்டோ ஓட்டுநா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் 6 வழக்குகளுக்குத் தீா்வு

புதுச்சேரி மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையம் அண்மையில் நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகள் சமாதானத்துக்குத் தகுதியானவை என்று கண்டறியப்பட்டு அதில் 6 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்ட நு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையிடமிருந்து மீனவா்களை மீட்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

இலங்கை கடற்படையிடமிருந்து காரைக்கால் மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுச்சேரி வெ. வைத்திலிங்கம் எம்.பி. கடிதம் எழ... மேலும் பார்க்க

மின்துறையை தனியாா்மயமாக்க எதிா்ப்பு: புதுவை முதல்வரிடம் திமுக எம்எல்ஏ.க்கள் மனு அளிப்பு

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்க எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் மாநில திமுக அமைப்பாள... மேலும் பார்க்க

போதைப் பொருளில்லா புதுவையை உருவாக்க வேண்டும்: ஆட்சியா் அ.குலோத்துங்கன்

போதைப் பொருளில்லா புதுவையை உருவாக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை கூறினாா். புதுச்சேரி மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் அரசால் தடை செய்யப்பட்ட பு... மேலும் பார்க்க