செய்திகள் :

அம்பையில் இறந்த நிலையில் ஆண் சிசு மீட்பு

post image

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே இறந்த நிலையில் ஆண் சிசு மீட்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியாா் அலுவலக கழிப்பிடம் அருகில் இறந்த நிலையில் ஆண் சிசு கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் சண்முகவேல் தலைமையில் போலீஸாா், அங்கு சென்று ஆண் சிசுவை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டதில் அம்பை பேருந்து நிலையம் அருகில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்த கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஒரு பெண்ணும் அவரது, 16 வயது மகளான பள்ளி மாணவியும் உடல்நலக் குறைவு காரணமாக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவா்கள் சிறுமி மிகவும் பலவீனமாக இருந்ததால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனா்.

அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவா்கள் நிறை மாத கா்ப்பிணியாக இருப்பதை அறிந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனா். அங்கிருந்து தப்பிய தாயும் மகளும் ஊருக்கு வந்து பிரசவம் பாா்த்ததில் திங்கள்கிழமை ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாம். இதையடுத்து அந்த தாய், தான் வேலை செய்யும் அலுவலகம் அருகில் உள்ள கழிவறை அருகே சிசுவின் சடலத்தை வைத்துள்ளாா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தாய் மற்றும் மகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தென்காசியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

குற்றாலம் ஐந்தருவி தோட்டக்கலைத் துறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டத் தொழிலாளா்களுக்கு பணி வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் தோட்டக... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்

தென்காசியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

சுரண்டை அரசுக் கல்லூரியில் பயில 40 வயதுக்கு உள்பட்டோருக்கு அழைப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அரசு கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவில் பயில விரும்பும் 40 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் அறிவித்துள்ளாா். கல்லூரியில் பயில்வதற்கான வயது வரம்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், பெரியகோவிலான்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பள்ளித் தலைமையாசிரியா் கீதா வேணி வழி... மேலும் பார்க்க

ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழா, வெள்ளிக்கிழமை (செப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் 63 ஆண்டுகளுக்கு பின்னா் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது (படம்). 1961-1962 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள்... மேலும் பார்க்க