செய்திகள் :

Bison: ``பரியேறும் பெருமாளில் பார்த்த மாரி, இப்போது வேறுமாரியாக மாறிவிட்டார்" - பா.ரஞ்சித்

post image

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ்  இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நீலம் ஸ்டுடியோ பா.ரஞ்சித், ``பரியேறும் பெருமாளில் பார்த்த மாரி இப்போது வேறுமாரியாக மாறிவிட்டார்.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

என்னிடம் மாரி செல்வராஜை அனுப்பி வைத்த ராம் சார், மாரிக்கு என் மெட்ராஸ் படத்தின் மீது விமர்சனம் இருக்கிறது எனச் சொல்லிதான் அனுப்பினார்.

மாரி செல்வராஜ் தன் கோபத்தை கலையாக மாற்றுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் ஒரே கதை உலகத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாகத் தெரியும்.

ஆனால், அவர் அந்த உலகத்தைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார். பரியேரும் பெருமாள் வேறு இந்த பைசன் வேறு. ஆனால் இரண்டும் மாரியின் உலகம்தான். மாரி நீ ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட்.

என்னுடன் பயணித்த இரண்டு நடிகர்களின் நடிப்பை கண்டு நான் மிரண்டு போனேன். அதில் முதலாவதாக பசுபதி. `சார்பட்டா  பரம்பரை’ மற்றும் `தங்கலான்’ திரைப்படங்களில் நடிப்பில் மிரட்டி இருப்பார்.

அதேபோல சியான் விக்ரம். `தங்கலான்’ திரைப்படத்தில் தன் உடலை வருத்தி மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்.

நான் அவரிடம் பலமுறை 'சினிமா துறையில் இவ்வளவு  திரைப்படம் நடித்த  பிறகும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? எது உங்களை இவ்வளவுக்கும் உத்வேகமாக இருக்கிறது..' எனக் கேட்டுள்ளேன்.

விக்ரம்
விக்ரம்

அதற்கு அவர் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குனர் தனது மொழியின் மூலம் படத்தை வெளிப்படுத்த முயற்சிக்கின்றார். ஆனால் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் தனது உடல் மொழியிலேயே திரைப்படத்தை விளக்கி இருப்பார்.

இவ்வளவு கடின உழைப்பிற்கும், மக்களிடம் இருந்து போதுமான அளவு ஆதரவு கிடைக்கின்றதா? ஒரு படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றால்தான், அந்தப் படத்தில் நடித்தவர்களின் உழைப்பு போற்றப்படுமா?

அவரின் நடிப்பை பார்த்து வியந்தவர்கள், அவரை அங்கீகரிப்பதில் நிறைய மன தடைகளை எதிர்கொள்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

அதனால்தான் அவரை அங்கீகரிக்கும் விதமாக தொடர்ந்து விக்ரம் இயங்கிக்கொண்டே, அவரின் நடிப்பை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். இதுவே அவரின் இந்த வெற்றி பயணத்திற்கான காரணமாக நான் எண்ணுகிறேன்.

அதேபோல பிறப்பினால் ஒருவருக்கு எந்த ஒரு கலையும் வந்து விடுவதில்லை. அவரின் திறமை, வசதி வாய்ப்புகளைக் கொண்டு அவர்கள் தனித்துவத்தை பெறுகின்றனர்.

துருவ் விக்ரம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் தோற்றம், அவரின் இருப்பு அருமையாக வந்திருக்கிறது. அவர் இந்தத் துறையில் வெகு தூரம் பயணிக்க போகிறார்.

பைசன் படத்தில்...

அதே போல அனுபாமா, ரஜிஷா, பசுபதி போன்றோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். முக்கியமாக, நிவாஸ் -க்கு இத்திரைப்படம் ஒரு புது  துவக்கமாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

அம்பேத்கர் ஒருபோதும் மக்களை கைவிட்டதில்லை!

இந்திய சமூகத்தின் எல்லாப் பிரச்னைக்கும் தீர்வாக நான் கருதுவது அம்பேத்கரைதான். அம்பேத்கர் ஒருபோதும் இந்திய மக்களை கைவிட்டதில்லை.

மக்கள் அவருக்குத் கொடுத்த வெறுப்பை, வெறுப்பாக திருப்பி கொடுக்காமல் மக்களை நெறிப்படுத்தும் வாழ்வியல் முறைகளாக அவற்றை வடிவமைத்து கொடுத்தார்.

மேலும், அவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இயங்குகிறேன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஜெய்பீம் " என்றார்.

Bison: `என் அம்மா பெருமிதமடைய பல முயற்சிகளை செய்திருக்கிறேன்" - மேடையில் நெகிழ்ந்த துருவ் விக்ரம்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி... மேலும் பார்க்க

Bison: `இந்தப் படம் என்னுடைய ஒட்டுமொத்த எமோஷனும் கர்வமும்’ - இயக்குநர் மாரி செல்வராஜ்

துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி... மேலும் பார்க்க

Bison: "துருவை கபடி நேஷனல் டீமில் விளையாட கூப்பிடுவாங்க!" - பசுபதி கலகல பேச்சு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன் - களமாடன். இதன் வெளியீட்டுக்கு முன்னான விழா நேற்றையதினம் (அக்டோபர் 12) சென்னையில் நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் உரு... மேலும் பார்க்க

"பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் அடுத்த படம்" - கலைமாமணி விருது பெற்ற நடிகர் மணிகண்டன் கொடுத்த அப்டேட்

நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருது விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுக... மேலும் பார்க்க

``இளையராஜாவுக்கு ஏன் பாராட்டு விழா நடத்தினோம்'' - முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது.இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: 'SJ சூர்யா, அனிருத், சாய் பல்லவி, மணிகண்டன்' - விருதாளர்கள் க்ளிக்ஸ் | Photo Album

இசையமைப்பாளர் அனிருத்நடிகர் SJ சூர்யாநடிகையார் சாய் பல்லவியேசுதாஸுக்கு பதிலாக விஜய் யேசுதாஸ் விருது பெற்றார்நடிகர் விக்ரம் பிரபுஇயக்குநர் லிங்குசாமிபாடலாசிரியர் விவேகாகலைமாமணி விருது: "இந்த விருது என்... மேலும் பார்க்க