செய்திகள் :

தஞ்சாவூர்: அரசு பேருந்து சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழந்த சோகம்!

post image

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி வழியாக தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கிப்பட்டி மேம்பாலத்தில் எதிரே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ வேன் அதிவேகமாக தஞ்சாவூர் நோக்கி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது சுற்றுலா வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் அரசு பேருந்து- வேன் விபத்து

விபத்து நடந்த பிறகு அலறல் சத்தம் கேட்டு பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். உடனடியாக போலீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் விபத்து நடந்த சம்பவ இடத்தில் வேனில் வந்த நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்திருந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் விபதது நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். செங்கிப்பட்டி மேம்பாலத்தில் ஒரு பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பேரிகார்டு அமைத்து ஒரு வழி பாதையாக மாற்றியிருந்தனர்.

உயிரிழந்தவர்கள்

வெளியூரில் இருந்து வந்த வேன் டிரைவர் இதை அறியாமல் வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிரே பேருந்து வந்ததால் நிலைதடுமாறி பேருந்து மீது மோதி விட்டதாக சொல்கிறார்கள். வேனில் சுமார் 11 பேர் இருந்துள்ளனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். வேனில் வந்த ஆறு பேர், பேருந்தில் வந்த இரண்டு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் வந்தவர்கள் நாகை வேளாங்கண்ணிக்கு வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. விபத்து குறித்து கர்நாடகாவில் உள்ள உறவினர்களுக்கு சொல்லப்பட்டது அவர்கள் கதறி அழுதுள்ளனர்.

விசாரணையில் ஜான் போஸ்கோ, ஆரோக்கியதாஸ், நளினி, செல்சியா, வேன் ஓட்டுநர் ஜெகதீசன் ஆகியோர் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருவர் அண்ணன், தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மகள்; வாக்குறுதியை நிறைவேற்ற இறுதிச்சடங்கில் பிறந்தநாள் கேக் வெட்டிய தந்தை

கொல்கத்தாவைச் சேர்ந்த இந்திரஜித் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் மத்திய பிரதேசத்திற்கு பிக்னிக் சென்று இருந்தார். சென்ற இடத்தில் லாரி ஒன்று அவர்களின் கார் மீது மோதியது. இதில் இந்திரஜித் மனைவி மற்று... மேலும் பார்க்க

மும்பை: "ஒரே மகளை இழந்துவிட்டோம்" - 19வது மாடியில் இருந்து சிமெண்ட் பிளாக் விழுந்து இளம்பெண் பலி

மும்பை மேற்கு பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி என்ற இடத்தில் வசித்து வந்தவர் சன்ஸ்ருதி அமின் (22). இப்பெண் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவர் தனது வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் சென்று கொண்டிர... மேலும் பார்க்க

நாமக்கல்: ஓடும் பேருந்திலிருந்து கழன்று விழுந்த கதவு... அரசு பேருந்தின் அவலநிலை!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு வரை செல்லும் கே1 அரசு பேருந்து தினந்தோறும் சென்று வருகிறது. பேருந்தை ஓட்டுநர் ராமு என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் குமாரபாளையத்தில் இருந்து பள்ளி... மேலும் பார்க்க

மும்பை: பாலத்தின் தடுப்பை உடைத்து கடலுக்குள் பாய்ந்த கார்; குடிபோதையில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு

மும்பையின் மேற்கு பகுதியை தென்பகுதியோடு இணைக்கும் விதமாக கடற்கரையையொட்டி கடற்கரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கடலில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்தக் கடல் பாலத்தில் பதிவாலா ... மேலும் பார்க்க

தென்காசி: காதலுடன் சென்ற சிறுமி விபத்தில் பலி; உறவினர்கள் போராட்டம்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் என்பவரது 16 வயது மகள் பதினோராம் வகுப்பு படித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மரத்தொழில் செய்து வந்த ரமேஷ் என்ற இளைஞரைக் காதலித்த... மேலும் பார்க்க

சேலம்: சாலையைக் கடக்க முயன்ற தலைமைக் காவலர்; லாரி மோதி பலியான சோகம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (40) என்பவர் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள்... மேலும் பார்க்க