செய்திகள் :

"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் 6) அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.

2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட ராமதாஸ், ஆஞ்சியோ பரிசோதனை முடித்துக் கொண்டு அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸைச் சந்தித்த ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்
ராமதாஸ் - முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்

இதற்கிடையில், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட அன்றே அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு நேரில் சென்றார் அன்புமணி.

பின்னர், அவர் ஐ.சி.யு-வில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை என்று அன்புமணி கூறினார்.

அதேசமயம், முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், ராமதாஸை வைத்து நாடகம் நடத்துகிறீர்களா என்றும், அவருக்கு ஏதாவது ஆனால் தொலைத்துவிடுவேன் என்றும் அன்புமணி கூறியிருக்கிறார்.

சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அன்புமணி, "அய்யா உடல்நலத்துடன் நல்லா இருக்காரு.

செக்கப் பண்ணதான் மருத்துவமனைக்கு போனாரு. செக்கப் போனதுல சில பேர், `அய்யாவுக்கு உடம்பு சரியில்ல வந்து பாருங்க பாருங்க' இன்றாங்க.

அன்புமணி
அன்புமணி

இதெல்லாம் அசிங்கமா இருக்கு. யார் யாரோ உள்ள போயிட்டு பார்த்துட்டு வராங்க.

இதென்ன கண்காட்சியா... அவர தூங்கவிடமாட்றாங்க. அவருக்கு ஏதாவது ஆச்சு தொலச்சு போட்ருவேன். அவரை வச்சிக்கிட்டு நாடகம் பண்றீங்களா..." என்று கோபமாகப் பேசினார்.

"போரை நிறுத்தும் பணியை ட்ரம்ப் தொடர்வார்" - நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன், தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கடந்த ஏழெட்டு மாதங்களாகக் கூறி வந்தார் டொனால்ட் ட்ரம்ப்.அமெரிக்காவின் உதவியுடன் கா... மேலும் பார்க்க

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 'மரியா கொரினா மச்சாடோ' - தலைமறைவாக இருப்பது ஏன்?

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. மக்களாட்சிப் போராளியான இவர், பல ஆண்டுகளாக வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மதுரோவின் அ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம்!’ -தகிக்கும் திமுக

`புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும்’ என்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரியில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ பு... மேலும் பார்க்க

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்த... மேலும் பார்க்க

Gaza: ஹமாஸ் - இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? - ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் மு... மேலும் பார்க்க