செய்திகள் :

வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி!

post image

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் கார்கோ முனையத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சரியாக பிற்பகல் 2:30 மணியளவில் 8-வது கேட் அருகே இந்த தீ விபத்து ஆரம்பித்திருக்கிறது.

தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் தல்ஹா பின் ஜாஷிம் கூற்றுப்படி, தீ விபத்து ஏற்பட்ட உடனேயே 9 பிரிவுகளும், அவற்றைத் தொடர்ந்து 15 பிரிவுகளும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாகக் களமிறங்கின.

மொத்தமாக தீயணைப்பு நடவடிக்கையில், வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், தீயணைப்புப் படை மற்றும் விமானப்படையின் இரண்டு தீயணைப்புப் பிரிவுகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டன.

மேலும், விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வங்காளதேச எல்லைக் காவல்படை (BGB) மற்றும் கடற்படையின் இரண்டு படைப் பிரிவுகள் இந்த நடவடிக்கையில் இணைந்தன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், இந்த தீ விபத்து காரணமாக டாக்கா விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

வங்காளதேசத்தில் இந்த ஒரு வாரத்தில் நடக்கும் மூன்றாவது மிகப்பெரிய தீ விபத்து இதுவாகும்.

கடந்த செவ்வாயன்று ரசாயனக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், சிட்டகாங்கில் உள்ள ஒரு ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலை கட்டிடம் தீ விபத்தில் மொத்தமாக அழிந்தது.

`வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி’ - கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சூழலில் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட ப... மேலும் பார்க்க

தடுப்புக் கம்பி மீது மோதிய ரயில் எஞ்சின் மின் கருவி; விபத்திலிருந்து தப்பிய ராமேஸ்வரம் ரயில்

ராமநாதபுரம் - ராமேஸ்வரம் வழித்தடத்தில் டீசல் எஞ்ஜின் பொறுத்திய ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த வழிதடம் மின்சார வழி தடமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் மின்சார ரயில் எஞ்சின்களை கொ... மேலும் பார்க்க

வால்பாறை: வீடு புகுந்து தாக்கிய யானை - ஒன்றரை வயது குழந்தை, பாட்டி உயிரிழந்த சோகம்

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருப்பதால் வால்பாறை நகரம், சுற்றுவட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் யானை, கரடி, காட்டு மாடு, புலி, சிறுத்தை ... மேலும் பார்க்க

மின்னல் வேகத்தில் பறந்த கார்; கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து - 3 பேர் பலி

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை 10.10 தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என பெயரிட்டு கடந்த 9-தேதி திறந்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: பைக் மீது மோதிய லாரி; கணவரின் கண்முன் துடிதுடித்து இறந்த மனைவி; தவிக்கும் பிள்ளைகள்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் நடந்த கொடூரமான வாகன விபத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அங்குள்ள பாட்டியானா என்ற கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும்(35), அவரது கணவர... மேலும் பார்க்க