செய்திகள் :

ஆந்திரா: அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து - 15 பேர் பலி; பயணிகளின் நிலை என்ன?

post image

ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் கர்னூலில் இன்று அதிகாலை தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதி இருக்கிறது. மோதலுக்குப்பின் அந்த இருசக்கர வாகனம் பேருந்தின் அடிப்பகுதிக்குள் சிக்கியதால் திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது..

ஏசி பஸ் என்பதால் தீ உடனடியாக பரவியிருக்கிறது. இந்த பேருந்தில் மொத்தம் 40 பேர் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் 15 பேர் பலி என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் படில் கூறியதாவது, ”பேருந்து ஏசி மாடல் என்பதால் வெளியில் தப்பிக்க சிலர் கண்ணாடி உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர் 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

சிலர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின் பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து அரசு ஆதரவை உறுதி செய்துள்ளார்.

"கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னா தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள்" என்று சந்திரபாபு நாயுடு எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரா பேருந்து தீ விபத்து: `ஏ.சி. பஸ் என்பதால்’ - கோர விபத்தை விளக்கும் மீட்கப்பட்ட பயணிகள்

தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து ஒன்று கர்னூல் பகுதியில் பைக் மீது மோதியதில் ஏற்பட்ட திடீர் விபத்தால், பேருந்து முழுமையாகத் தீ பற்றி எர... மேலும் பார்க்க

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்– உணவருந்தியபோதே தாய், மகள் உயிரிழந்த சோகம்

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கடந்த 16-ம் தேதி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகம் மற்றும் புதுச... மேலும் பார்க்க

மும்பை: 12 மாடி கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் பலி, 10 பேருக்கு தீவிர சிகிச்சை -நள்ளிரவில் சோகம்

மும்பை அருகிலுள்ள நவிமும்பை வாஷி பகுதியில் செக்டர் 14-ல் இருக்கும் ரஹஜா ரெசிடென்சி அடுக்குமாடி கட்டிடத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 10வது மாடியில் வசிக்கும் கமலா ஜெயின் வ... மேலும் பார்க்க

வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி!

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் கார்கோ முனையத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சரியாக பிற்பகல் 2:30 மணியளவில்... மேலும் பார்க்க

`வானமே இடிஞ்சு விழுந்த மாதிரி இருந்துச்சி’ - கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த சூழலில் வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். ... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: நொடியில் தீப்பற்றி எரிந்த பேருந்து, 20 பயணிகள் தீயில் கருகி பலி - என்ன நடந்தது?

ஜெய்சல்மாரில் நடந்த கொடூர விபத்தினால் பேருந்தில் இருந்த 20 பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதியம் 3 மணியளவில் ஜெய்சல்மாரிலிருந்து ஜோத்பூர் புறப்பட்ட ப... மேலும் பார்க்க