செய்திகள் :

மும்பை: 'அனகோண்டா குட்டிகள், உடும்புகள், ஆமைகள்' - தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த பெண் கைது

post image

வெளிநாடுகளிலிருந்து அபூர்வமான விலங்குகள் இந்தியாவிற்கு அடிக்கடி கடத்தி வரப்படுவது வழக்கம். இந்த விலங்குகள் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.

இவ்வகையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த மும்பை தானே பகுதியைச் சேர்ந்த சரீன் அஸ்லாம் ஷேக் என்ற பெண்ணின் சூட்கேஸை சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அந்தச் சூட்கேஸில் பிரத்யேக கண்டெய்னர்களில் அபூர்வ வகை விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

உடும்புகள், ஆமைகள், அனகோண்டா பாம்பு குட்டிகள் மற்றும் பிற பல்லி இனங்கள் உள்ளே இருந்தன. வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்க வெளிநாட்டு விலங்குகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் இது போன்ற விலங்குகள் கடத்தப்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது.

கடத்தி வரப்பட்ட பல்லி இனங்கள்
கடத்தி வரப்பட்ட பல்லி இனங்கள்

தாய்லாந்திலிருந்து விலங்குகளைக் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகளை மீட்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த விலங்குகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை முழுமையாகச் சோதித்த பிறகு சர்வதேச வனவிலங்குகள் சட்டப்படி தாய்லாந்திற்கே மீண்டும் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடத்தி வரப்பட்ட விலங்குகள் அனைத்தும் மிகவும் சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன என்றும், அவை மூச்சுத்திணறி உயிரிழக்கும் அபாயம் இருந்தது என்றும், வன விலங்குகள் நல ஆர்வலர் பவன் சர்மா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''அனகோண்டா பாம்பு இனங்கள் கடத்தப்படுவது மிகவும் அபூர்வம். வனவிலங்கு மோசடி செய்பவர்கள் இந்த வெளிநாட்டு விலங்குகளை செல்லப் பிராணி வர்த்தக சந்தையில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்தியர்கள் இதுபோன்ற வெளிநாட்டு இனங்களை வாங்குவதை நிறுத்த வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

மொத்தம் 154 விலங்குகள் கடத்தி வரப்பட்டு இருந்தன. அதில் நான்கு அனகொண்டா குட்டிகள் இருந்தன.

அனகோண்டாக்கள் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியவை. அதற்கு விஷம் கிடையாது. ஆனால் அவை உலகின் மிக நீளமான மற்றும் கனமான பாம்புகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. அவை தான் சாப்பிடும் விலங்குகளின் இரத்த ஓட்டம் துண்டிக்கப்படும் வரை அவற்றை அழுத்தி இரையைக் கொன்று, பின்னர் அவற்றை முழுவதுமாக விழுங்குகின்றன.

விருதுநகர்: 'இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம்' - இரிடியம் மோசடியில் அதிமுகவினர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க 8 வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன் (52), அ.தி.மு.க உறுப்பினர்கள் கந்தநிலா (55), ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் இணைந்து தனியார் அறக... மேலும் பார்க்க

`கேம் விளையாடாதன்னு திட்டுனாங்க' கத்திரிகோலால் தாயைக் குத்திய மகன் – இரண்டு சிறுவர்கள் கைதான பின்னணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் - பரமேஸ்வரி தம்பதிக்கு, 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் சந்தோஷ் (சிறுவனின் பெயர் மாற்றப்பட்டி... மேலும் பார்க்க

`உன் கணவனை நக்சலைட் பகுதிக்கு மாற்றிவிடுவேன்’ - எஸ்.ஐ மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த IPS அதிகாரி?

சத்தீஷ்கர் மாநிலத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஷ்கரில் உள்ள ராய்ப்பூர் அருகில் உள்ள... மேலும் பார்க்க

Louvre Museum Heist: ரூ.847 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்படாமல் போகலாம் - ஏன்?

பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிறு (அக்டோபர் 19) அன்று பழம்பெரும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. உலகிலேயே அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கருதப்படும் அரு... மேலும் பார்க்க

`57 மில்லியன் ஃபாலோவர்ஸ்' இன்ஃப்ளூயன்சரை மிரட்டி ரூ. 50 லட்சம் கொள்ளை; புதிய வகை சைபர் மோசடி

பெண்கள் மற்றும் முதியர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது அடிக்கடி நடந்து வருகிறது. இதில் நன்றாக படித்தவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மும்பையில் சமீபத்தில் ஒரு முதிய தம்பதியை டிஜிட்டல்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: இரு தரப்பு மோதலில் இளைஞர் கொலை - 4 சிறார்கள் உட்பட 6 பேர் கைது!

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், நேற்று இரவு தன் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொ... மேலும் பார்க்க