செய்திகள் :

தூத்துக்குடி: இரு தரப்பு மோதலில் இளைஞர் கொலை - 4 சிறார்கள் உட்பட 6 பேர் கைது!

post image

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், நேற்று இரவு தன் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியோடியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கிருஷ்ணராஜபுரத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாகராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நாகராஜ் தாளமுத்துநகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது கோஷ்டியில் இருந்துள்ளார். பிரகாஷின் எதிர் கோஷ்டியான அருண்குமார் மற்றும் திரவியராஜ் ஆகியோர் இவர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த இரு கோஷ்டிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீஸார் 7 அடிதடி வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் கோஷ்டியினர், திரவியராஜ் மற்றும் அருண்குமார் கோஷ்டியைச் சேர்ந்த விக்னேஷ்வரன், துபிசன், ஹரிகரன் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திரவியராஜ் கோஷ்டியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஹரிகரன் பிரகாஷை கொலை செய்யும் நோக்குடன் அவரது வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். ஆனால், கடந்த 19-ம் தேதியன்று தாளமுத்துநகர் காவல் நிலைய போலீஸார் பிரகாஷை வேறு ஒரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது

பிரகாஷ் வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் அவர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியுள்ளனர். பிரகாஷ் கோஷ்டியைச் சேர்ந்த யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தது. இந்த நிலையில்தான் நேற்றிரவு கிருஷ்ணராஜபுரம் 3வது தெருவில் பைக்கில் வந்து கொண்டிருந்த நாகராஜை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இக்கொலை வழக்கில் கார்த்திக், ஹரிகரன் மற்றும் 4 இளஞ்சிறார்கள் உட்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

`57 மில்லியன் ஃபாலோவர்ஸ்' இன்ஃப்ளூயன்சரை மிரட்டி ரூ. 50 லட்சம் கொள்ளை; புதிய வகை சைபர் மோசடி

பெண்கள் மற்றும் முதியர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது அடிக்கடி நடந்து வருகிறது. இதில் நன்றாக படித்தவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மும்பையில் சமீபத்தில் ஒரு முதிய தம்பதியை டிஜிட்டல்... மேலும் பார்க்க

`தேர்தல் சதி': அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டை; என்கவுன்ட்டரில் 4 ரவுடிகள் பலி! - காவல்துறை

டெல்லியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் பீகாரைச் சேர்ந்த 4 ரவுடிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், ``பீகாரைச் ச... மேலும் பார்க்க

`ஆசை' பட பாணியில் மனைவி, 2 மகன்கள் கொலை செய்துவிட்டு தொழிலதிபர் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா (56). சிரஞ்சீவியின் மனைவி ரேவதி(46). இந்த தம்பதியினருக்கு ரித்விக் ஹர்ஷத்(... மேலும் பார்க்க

பார்த்ததும் திருமணம்; பெண் கிடைக்காத விவசாயிகள் டார்கெட் - மகாராஷ்டிராவை மிரட்டும் திருமண மோசடி

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் இளம் விவசாயிகள் 40 வயது வரை திருமணம் செய்ய முடியாமல் இருக்கின்றனர். எனவே ஏதாவது பெண் இருப்பதாக தகவல் கிடைத்தா... மேலும் பார்க்க

``11 பாட்டில் பீர் குடித்து விட்டு, பேண்டில் உச்சா போன ஐ.டி. இளைஞர்'' - விமான பயணத்தில் ரகளை

அமெரிக்காவில் இருந்து விமானத்தில் இந்தியா வரும் பயணிகள் சில நேரங்களில் மது குடித்துவிட்டு செய்யும் ரகளையை தாங்க முடியாது. அந்த ரகளையில் `சிறுநீர் கழிப்பது' முதலிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் தற்போத... மேலும் பார்க்க

மும்பை: 1200 அடி பள்ளத்தாக்கில் பிணமாகக் கிடந்த பெங்களூரு பேராசிரியர்; தீவிர விசாரணையில் போலீஸ்

பெங்களூருவில் பேராசிரியராக இருந்தவர் சண்முக பால சுப்ரமணியம் (58). இவர் சிறந்த பேச்சாளர் ஆவார். நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்காக நடத்தும் கருத்தரங்குகளில் பேச்சாளராக இவரை அழ... மேலும் பார்க்க