செய்திகள் :

`தேர்தல் சதி': அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டை; என்கவுன்ட்டரில் 4 ரவுடிகள் பலி! - காவல்துறை

post image

டெல்லியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் பீகாரைச் சேர்ந்த 4 ரவுடிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், ``பீகாரைச் சேர்ந்த ரஞ்சன் பதக் (வயது 25), பிம்லேஷ் மஹ்தோ (வயது 25), மணீஷ் பதக் (வயது 33) மற்றும் அமன் தாக்கூர் (வயது 21) ஆகியோர் பீகாரில் பல கொடூரமான வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள்.

அவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் `சிக்மா அண்ட் கம்பெனி' கும்பலைச் சேர்ந்தவர்கள். ரஞ்சன் பதக் இந்தக் கும்பலின் தலைவராக இருந்தார்.

துப்பாக்கி
துப்பாக்கி

பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பதக், அவரது மூன்று கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு பெரிய சதித்திட்டத்தைத் தீட்டியதாகத் தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பதக் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25,000 பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் அவர்கள் இருப்பதாகத் தகவல் கிடைதது.

அதன் அடிப்படையில் தேடப்பட்டவர்களுக்கும் டெல்லி மற்றும் பீகார் காவல்துறையினருக்கும் இடையே ரோஹினியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சௌக்கிலிருந்து பன்சாலி சௌக் வரை பகதூர் ஷா மார்க்கில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் அந்த 4 பேரும் சுடப்பட்டனர். அதைத் தொடர்ந்து 4 பேரையும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

`57 மில்லியன் ஃபாலோவர்ஸ்' இன்ஃப்ளூயன்சரை மிரட்டி ரூ. 50 லட்சம் கொள்ளை; புதிய வகை சைபர் மோசடி

பெண்கள் மற்றும் முதியர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிப்பது அடிக்கடி நடந்து வருகிறது. இதில் நன்றாக படித்தவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மும்பையில் சமீபத்தில் ஒரு முதிய தம்பதியை டிஜிட்டல்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: இரு தரப்பு மோதலில் இளைஞர் கொலை - 4 சிறார்கள் உட்பட 6 பேர் கைது!

தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், நேற்று இரவு தன் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நாகராஜை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொ... மேலும் பார்க்க

`ஆசை' பட பாணியில் மனைவி, 2 மகன்கள் கொலை செய்துவிட்டு தொழிலதிபர் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிரஞ்சீவி தாமோதர குப்தா (56). சிரஞ்சீவியின் மனைவி ரேவதி(46). இந்த தம்பதியினருக்கு ரித்விக் ஹர்ஷத்(... மேலும் பார்க்க

பார்த்ததும் திருமணம்; பெண் கிடைக்காத விவசாயிகள் டார்கெட் - மகாராஷ்டிராவை மிரட்டும் திருமண மோசடி

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் இளம் விவசாயிகள் 40 வயது வரை திருமணம் செய்ய முடியாமல் இருக்கின்றனர். எனவே ஏதாவது பெண் இருப்பதாக தகவல் கிடைத்தா... மேலும் பார்க்க

``11 பாட்டில் பீர் குடித்து விட்டு, பேண்டில் உச்சா போன ஐ.டி. இளைஞர்'' - விமான பயணத்தில் ரகளை

அமெரிக்காவில் இருந்து விமானத்தில் இந்தியா வரும் பயணிகள் சில நேரங்களில் மது குடித்துவிட்டு செய்யும் ரகளையை தாங்க முடியாது. அந்த ரகளையில் `சிறுநீர் கழிப்பது' முதலிடத்தில் இருக்கிறது. அந்த வகையில் தற்போத... மேலும் பார்க்க

மும்பை: 1200 அடி பள்ளத்தாக்கில் பிணமாகக் கிடந்த பெங்களூரு பேராசிரியர்; தீவிர விசாரணையில் போலீஸ்

பெங்களூருவில் பேராசிரியராக இருந்தவர் சண்முக பால சுப்ரமணியம் (58). இவர் சிறந்த பேச்சாளர் ஆவார். நாடு முழுவதும் தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்காக நடத்தும் கருத்தரங்குகளில் பேச்சாளராக இவரை அழ... மேலும் பார்க்க