செய்திகள் :

கோவை திடீரென சாய்ந்த மின் கம்பம் - கண் இமைக்கும் நொடியில் யானைக்கு நடந்த சோகம்

post image

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவார சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும். இவற்றில் யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் உலா வருவது வழக்கம். அங்கு தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில், நேற்று இரவு 25 மதிக்கத்தக்க ஆண் யானை சென்றுள்ளது.

யானை மீது மின் கம்பம்

அந்த யானை  நாகராஜன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அண்மையில் அந்தப் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அங்கு சென்ற அந்த யானை மின் கம்பத்தை முட்டித் தள்ளியது. இதில் மின் கம்பம் யானை மீது விழுந்து, மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளர் நாகராஜன் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

யானை

அந்தத் தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே பகுதியில் தான் கடந்த வாரம் ரோலக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஆண் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் அந்த இடத்தில் மின்வேலி இருந்ததால் யானை அதை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளது. கடந்த சில நாள்களாக கோவையில் கனமழை பெய்து வந்ததால் அப்பகுதி சேறும், சகதியுமாக இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக யானை மின்கம்பத்தை முட்டி, விழுந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

உயிரிழந்த யானை

உயிரிழந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆனைமலை பருத்தியூர் அருகே வயது முதிர்ந்த பெண் யானை ஒன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.

இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா?

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது... பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும், இன்னும் அதில் இழுபறி நீடித்து வருகிறது.என்ன பேச்சுவார்த்தை?இந... மேலும் பார்க்க

Bihar: தொகுதி பங்கீடு சிக்கல் டு முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி வரை - பீகார் தேர்தல் அப்டேட்ஸ்!

பீகார் தேர்தல்: பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 06-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு... மேலும் பார்க்க

``விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம், முறைகேடு'' - திமுக-வுக்கு சீமானின் 9 கேள்விகள்

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்ட நெல் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.ஒருபக்கம் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்க... மேலும் பார்க்க

'சாதியப் பிரச்னைகளை படமாக எடுக்கக் கூடாது' - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுஅவர், “சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவை வரவுள்ளார். அவருக்கு... மேலும் பார்க்க

``அவமானம், வெறும் 80 ரூபாய்க்கு வாக்காளரின் உரிமையை பாஜக பறித்ததுள்ளது'' - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையத்தின் மீதும், நடந்து முடிந்த நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இது தொடர்பாக பல்வேறு ஆதாரங்களுடன் செய்தியாளர்களையு... மேலும் பார்க்க