செய்திகள் :

அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?

post image

ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், கடன் கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, வங்கியில் பொதுமக்கள் அடகுவைத்த நகைகளின் இருப்புகளிலும், கடன் தொகைகளிலும் பெரிய அளவில் முரண் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கு பணியாற்றி வந்த வங்கி ஊழியர்களிடம் கணக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீஸார், வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வங்கியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை மதிப்பீட்டளராகப் பணியாற்றி வரும் ரமேஷ்குமார் பொதுமக்கள் அடகு வைத்த 8.250 கிலோ தங்க நகைகளை வங்கி மேலாளருடன் இணைந்து திருடியது தெரியவந்தது. உடனடியாக, ரமேஷ்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

ஈரோடு கூட்டுறவு வங்கி
ஈரோடு கூட்டுறவு வங்கி

அப்போது நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமாருடன் இணைந்து வங்கி மேலாளர் கதிரவன் மற்றும் அவரின் நண்பரான செந்தில்குமார் ஆகியோர் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி மேலாளர் கதிரவன், நகை மதிப்பீட்டாளர் ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8.250 கிலோ தங்க நகைகளையும் மீட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் ரமேஷ்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் அடகு வைத்த நகைககள் வங்கி ஊழியர்களால் திருடப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுக்குமாடியில் வெடித்த சிலிண்டர்; முன்னாள் காதலன் உதவியால் நடந்த கொலை - என்ன நடந்தது?

டெல்லி திமர்பூர் பகுதியில் இம்மாத மத்தியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ராம்கேஷ் மீனா (32) என்பவர் தீப்பிடித்து எரிந்து கிடந்தார். அவர் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இறந்ததாக ஆரம்பத்தில் போலீஸார் நம்பி... மேலும் பார்க்க

ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ - அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் ... மேலும் பார்க்க

வேலைக்கு போகாமல் மாதம் ரூ.1.6 லட்சம்; சம்பளமாக வந்த லஞ்சம்; அரசு அதிகாரியின் மனைவி சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநராக இருப்பவர் பிரத்யூமன் தீட்ஷித். இவரது மனைவி பூனம். தீட்ஷித் மனைவி இரண்டு ஆண்டுகள் இரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கரம்பயம், கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) ஐந்தாம் வகுப்ப... மேலும் பார்க்க

சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது மெயின் சாலையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் நவீன்குமார் (38). இவரின் மனைவி நிவேதிதா. இந்த தம்பதியினரின் மகன் லவின் (7). இவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்... மேலும் பார்க்க

ஊட்டி: 1 ரூபாய் அம்மா உணவக இட்லி, ரூ.10-க்கு விற்பனை செய்யும் தனியார் ஹோட்டல் - அதிர்ச்சி பின்னணி

நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் தமிழ்நாடு அரசின் மலிவு விலை உணவக திட்டமான அம்மா உணவகங்கள் கடந்த 2013- ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. 1 ரூபாய்க்கு இட்லி, 5 ர... மேலும் பார்க்க