செய்திகள் :

ஊட்டி: 1 ரூபாய் அம்மா உணவக இட்லி, ரூ.10-க்கு விற்பனை செய்யும் தனியார் ஹோட்டல் - அதிர்ச்சி பின்னணி

post image

நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் தமிழ்நாடு அரசின் மலிவு விலை உணவக திட்டமான அம்மா உணவகங்கள் கடந்த 2013- ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் என மிக மிக குறைந்த விலையில் வழங்கப்படும் உணவுகளை உண்டு மக்கள் பலரும் பசியாறி வருகின்றனர்.

அம்மா உணவகம்

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து 1 ரூபாய் இட்லிகளை ஹாட் பாக்ஸில் மொத்தமாக வாங்கிச் செல்லும் எதிரில் உள்ள கே.கே.எஸ் தனியார் உணவகத்தினர், அதே இட்லியை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 10, 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த மோசடி குறித்த போட்டோ, வீடியோக்கள் ஆதாரப்பூர்வமாக வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த மோசடி குறித்து பேசும் அக்கம்பக்கத்து கடைக்காரர்கள், " இந்த அம்மா உணவகத்தில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ள இந்த தனியார் ஹோட்டலுக்கு அடிக்கடி ஹாட் பாக்ஸில் இட்லிகள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. மலிவு விலைக்கு வாங்கி கொள்ளை லாபத்தில் விற்கிறார்கள். பசியுடன் வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்காமல் பரிதாபமாக திரும்பிச் செல்கின்றனர். புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்வதில்லை " என்றனர்.

தனியார் உணவகம்

இதனை நாம் ஊட்டி நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச்‌ சென்றோம், "அம்மா உணவகங்களில் இருந்து மொத்தமாக யாருக்கும் பார்சல் தரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறோம். 5 நபர்களுக்கான உணவை பார்சல் கேட்டால் கூட அவர்களின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு தான் தர வேண்டும் என்கிற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் " என்றனர்.

கே.கே.எஸ் ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அம்மா உணவக பணியாளர்கள் நம்மிடம் பேச மறுத்துவிட்ட நிலையில், இந்த விதிமீறல் குறித்து ஆய்வு மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது மெயின் சாலையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் நவீன்குமார் (38). இவரின் மனைவி நிவேதிதா. இந்த தம்பதியினரின் மகன் லவின் (7). இவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து 9 ஆடுகள் இறப்பு; இறந்த ஆடுகளுடன் போராட்டத்தில் குதித்த விவசாயி- புதுக்கோட்டை சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவில் அமைந்துள்ளது அம்மாபட்டினம். இந்த ஊரைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் 50- க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதியில் சுற... மேலும் பார்க்க

ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

டெல்லி: அந்தரங்க வீடியோவை அழிக்க மறுத்த லிவ் இன் பார்ட்னர்; மாஜி காதலன் துணையோடு எரித்து கொன்ற பெண்

டெல்லியில் உள்ள காந்தி விகார் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியில் ரமேஷ் என்பவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: `பாலியல் வன்கொடுமை, இன ரீதியான தாக்குதல்’ - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இங்கிலாந்தின் வால்சல் பகுதியில் வசித்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் இன ரீதியாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள... மேலும் பார்க்க

Cyber Crime: மும்பையை அச்சுறுத்தும் டிஜிட்டல் கைது; 218 பேரிடம் ரூ. 112 கோடி பறிப்பு; திணறும் போலீஸ்

நாடு முழுவதும் டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து தவிக்கின்றனர். போலீஸார் இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய... மேலும் பார்க்க