செய்திகள் :

Bihar Election: சொந்தக் கட்சி சீனியர்களை மாறி மாறி நீக்கும் JDU, RJD; பரபரக்கும் பீகார் களம்!

post image

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க-வும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

மறுபக்கம் மகாபந்தன் கூட்டணியில் 143 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 61 இடங்களில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன.

பீகாரில் நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி
பீகாரில் நிதிஷ் குமாருடன் பிரதமர் மோடி

இதில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும், என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரும் முன்னிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதுபோக, ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மூன்றாவது கூட்டணியும், தனித்து களமிறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜும் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ, சீனியர் நிர்வாகிகள் உள்ளிட்டோரை தங்களின் கட்சியிலிருந்து நீக்கி வருவது பேசுபொருளாகியிருக்கிறது.

முன்னதாக கடந்த 3 நாள்களில், முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார், எம்.எல்.ஏ கோபால் மண்டல், மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஷியாம் பகதூர் சிங், சுதர்சன் குமார் மற்றும் பல முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், உள்ளூர் தலைவர்கள் என மொத்தம் 16 பேரை கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கட்சிக்கெதிரான செயல்களில் ஈடுபட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து 27 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6 வருடங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

இந்த 27 பேரில் சோட் லால் ராய், முகமது கம்ரான் ஆகிய 2 எம்.எல்.ஏக்கள், ராம் பிரகாஷ் மஹ்தோ, அனில் சாஹ்னி, சரோஜ் யாதவ், அனில் யாதவ் ஆகிய 4 முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் கணேஷ் பாரதி ஆகியோர் அடங்குவர்.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநில தலைவர் மங்கனி லால் மண்டல் வெளியிட்ட அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஜனதா தளம் அல்லது மகாபந்தன் வேட்பாளர்களுக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கையாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

'மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு' - ஓபிஎஸ்-ஸின் கருத்து வியூகமா? குழப்பமா?

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தன் அரசியல் பயணத்தை 'அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மூலம் தனித்துத் தொடங்கினார், ஓ.பி.எஸ். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இணைந்தார். எனினும், க... மேலும் பார்க்க

"தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும்" - சு.வெங்கடேசன் எம் பி கூறுவது என்ன?

மதுரையில் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை மாற்றி அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகளுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

'விஜய் 8 பேர் கால்லையும் விழுந்து மன்னிப்பு கேட்டாரு'- சந்திப்பு குறித்து பாதிக்கப்பட்ட குடும்பம்

கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தவெக சார்பில் கொடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

TVK: `டெல்டா காரன் ஸ்டாலின் அரசுக்கு என் கேள்விகள்' - நெல் கொள்முதல் விவகாரத்தில் விஜய்

தமிழகத்தில் இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்துவரும் சூழலில், நெல் கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் முட்டைகள் தேக்கத்தில் ... மேலும் பார்க்க

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி... மேலும் பார்க்க

Tvk Vijay Resort சந்திப்பு: Karur குடும்பங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? Decode

Tvk Vijay Karur stampedeல் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது, கரூர் அசம்பாவிதம் நடந்த கடந்த ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்தது என விளக்க... மேலும் பார்க்க