செய்திகள் :

சொந்த ஊருக்கு வரும் துணை ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு; பாதுகாப்பு வளையத்துக்குள் திருப்பூர்

post image

குடியரசுத் துணைத் தலைவராக சி. பி. ராதாகிருஷ்ணன் அண்மையில் பொறுப்பேற்று கொண்டார். திருப்பூரை சொந்த ஊராகக் கொண்ட அவர், இன்று (அக்டோபர் 28) மற்றும் நாளை (அக்டோபர் 29) என இரண்டு நாட்கள் திருப்பூரில் தங்கி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

இதையொட்டி, மாநகரம் மற்றும் ஷெரீஃப் காலனியில் உள்ள அவரது வீடு, மேலும் அவர் செல்லும் வழித்தடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒத்திகை
ஒத்திகை

கோவையிலிருந்து இன்று மாலை திருப்பூருக்கு வர இருக்கும் சி. பி. ராதாகிருஷ்ணன், திருப்பூரில் உள்ள திருப்பூர் குமரன் சிலை மற்றும் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

தொடர்ந்து ஷெரீஃப் காலனியில் உள்ள வீட்டில் தங்க இருக்கும் சி. பி. ராதாகிருஷ்ணன், புதன்கிழமை காலை திருப்பூர் சந்திராபுரத்தில் உள்ள கோயிலும், முத்தூர் அருகே உள்ள குலதெய்வக் கோயிலுக்கும் செல்கிறார். தொடர்ந்து வேலாயுதசாமி மண்டபத்தில் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் கலந்து கொள்ளும் பாராட்டு நிகழ்வில் பங்கேற்பார்.

பாதுகாப்பு பணியில்
பாதுகாப்பு பணியில்

இதையொட்டி பல்வேறு இடங்களிலும் நேற்று போலீஸார் மோப்பநாய் சோதனையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். திருப்பூர் மாநகர் போலீஸார், சென்னை போலீஸார், சிஆர்பிஎஃப் ஆகியோர் சேர்ந்து சோதனை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி, சுமார் ஆயிரம் போலீஸார் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசுத் துணைத் தலைவரான பின்பு முதல்முறையாக திருப்பூர் வருகையையொட்டி, பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

திருப்பூர் மாநகரில் 2 நாள்களும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவிநாசி வழியாக வரும் கனரக வாகனங்கள் திருமுருகன்பூண்டி வழியாக இடது புறம் திரும்பி பூலுவப்பட்டி வழியாக பி. என். ரோட்டை அடைந்து நகருக்குள் வர வேண்டும்.

தாராபுரம் சாலை வழியாக நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் கோவில் வழி, பெருந் தொழுவு, கூலிப்பாளையம் நாலு ரோடு வழியாக ஊத்துக்குளி சாலையை அடைந்து நகருக்குள் வரலாம்.

பாதுகாப்பு பணியில்
பாதுகாப்பு பணியில்

பல்லடம் சாலை செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் அனைத்தும் கோவில் வழி பேருந்து நிறுத்தம் வழியாக அய்யம்பாளையம் நாலு ரோடு, காளி குமாரசாமி கோவில் சாலையை அடைந்து வீரபாண்டி பிரிவு வழியாக பல்லடம் சாலையை அடைந்து நகருக்குள் வரலாம்.

இன்று குமரன் ரோடு, பார்க் ரோடு, மங்கலம் ரோடு, காமராஜர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயண திட்டத்தை அதற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். நாளை தாராபுரம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, காமராஜர் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபம், சந்திராபுரம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதற்கு ஏற்ப தங்கள் பயண திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம் என மாநகர் போலீஸார் தெரிவித்துள்ளார்.

"தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும்" - சு.வெங்கடேசன் எம் பி கூறுவது என்ன?

மதுரையில் இரண்டாவது ரயில் முனையமாக கூடல் நகர் ரயில் நிலையத்தை மாற்றி அறிவிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகளுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

'விஜய் 8 பேர் கால்லையும் விழுந்து மன்னிப்பு கேட்டாரு'- சந்திப்பு குறித்து பாதிக்கப்பட்ட குடும்பம்

கரூரில் கடந்த செப். 27-ம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்ச ரூபாய் தவெக சார்பில் கொடுக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடு... மேலும் பார்க்க

TVK: `டெல்டா காரன் ஸ்டாலின் அரசுக்கு என் கேள்விகள்' - நெல் கொள்முதல் விவகாரத்தில் விஜய்

தமிழகத்தில் இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்துவரும் சூழலில், நெல் கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் முட்டைகள் தேக்கத்தில் ... மேலும் பார்க்க

Bihar Election: சொந்தக் கட்சி சீனியர்களை மாறி மாறி நீக்கும் JDU, RJD; பரபரக்கும் பீகார் களம்!

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும... மேலும் பார்க்க

Tvk Vijay Resort சந்திப்பு: Karur குடும்பங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? Decode

Tvk Vijay Karur stampedeல் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை நேரில் வரவழைத்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பில் என்ன நடந்தது, கரூர் அசம்பாவிதம் நடந்த கடந்த ஒரு மாதத்தில் என்னவெல்லாம் நடந்தது என விளக்க... மேலும் பார்க்க

``AI அமைச்சரின் 83 குழந்தைகள் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்வார்கள்'' - அல்பேனியா பிரதமர் அதிரடி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா, கடந்த செப்டம்பர் மாதம் உலகின் முதல் ஏ.ஐ. (Artificial Intelligence) அமைச்சரை நியமித்து உலகின் கவனத்தை ஈர்த்தது. ஊழலை ஒழிக்கவும், அரசின் செயல்திறனை அதிகரிக்கவும் உர... மேலும் பார்க்க