செய்திகள் :

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

post image

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார்.

பின்னர், அதே பைக்கில் வீடு திரும்பி வந்தபோது, பைக்கை ஓட்டிய இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றிருக்கிறார். அதைக் கவனித்த வடமாநில இளம்பெண், எங்கே செல்கிறீர்கள் என்று பைக்கை ஒட்டியவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பைக் டாக்ஸி
பைக் டாக்ஸி

ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பைக்கை ஒட்டியவர், இருட்டான பகுதியில் பைக்கை நிறுத்தியிருக்கிறார். பின்னர் பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை கீழே இறங்கும்படி கூறியிருக்கிறார்.

என்னவென்று தெரியாமல் திகைத்த அந்த இளம்பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்திருக்கிறார் பைக்கை ஓட்டிய இளைஞர். அதனால் சத்தம் போட முடியாமலும் அந்த இளைஞரின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமலும் இளம்பெண் தவித்திருக்கிறார்.

இந்தச் சூழலில் அந்த இளம்பெண்ணை மிரட்டிய இளைஞர் அவருக்கு சொல்ல முடியாத பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த இளைஞருடன் போராடியிருக்கிறார்.

அதன்பிறகு இளம்பெண்ணை அங்கேயே தவிக்க விட்டு விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் தனக்கு நடந்த கொடுமைகளை தன்னுடைய கணவருக்கு செல்போன் மூலம் இளம்பெண் தெரிவித்தார்.

பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைதான சிவகுமார்
பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைதான சிவகுமார்

அதன்பிறகு கணவரின் உதவியோடு வீட்டுக்கு வந்த இளம்பெண், வாகனகரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பைக்கை ஓட்டிய இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் இளைஞர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதியானது. இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் சிவகுமார் (22) என்றும் தேனிமாவட்டம், ஓடைப்பட்டி தாலுக்காவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. விசாரணைக்குப்பிறகு சிவகுமாரை கைது செய்த போலீஸார், அவரின் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் ... மேலும் பார்க்க

மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்ற... மேலும் பார்க்க

நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.நெல்லை மாவட்... மேலும் பார்க்க

அடுக்குமாடியில் வெடித்த சிலிண்டர்; முன்னாள் காதலன் உதவியால் நடந்த கொலை - என்ன நடந்தது?

டெல்லி திமர்பூர் பகுதியில் இம்மாத மத்தியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ராம்கேஷ் மீனா (32) என்பவர் தீப்பிடித்து எரிந்து கிடந்தார். அவர் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இறந்ததாக ஆரம்பத்தில் போலீஸார் நம்பி... மேலும் பார்க்க

அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?

ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலை... மேலும் பார்க்க

ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ - அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் ... மேலும் பார்க்க