செய்திகள் :

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அலாவுதீன்

இதனிடையே அவருக்கு, ஹக்கீம் என்கிற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அலாவுதீனின் சகோதரர் ஆரிஃப், அவரின் நண்பர் கௌதம் ஹக்கீமை திட்டி கத்தியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஹக்கீம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆரிஃப் மற்றும் கௌதமை கைது செய்தனர்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. மேட்டுப்பாளையம் காவல்துறையினர் நம்மிடம் கூறுகையில், “காரமடை நகராட்சியில் ரவிக்குமார் என்கிற திமுக கவுன்சிலர் உள்ளார். ரவிக்குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கவுன்சிலர் ராம்குமார்

இளைய மகன் சரண்குமாருக்கு திருமணமாகி பூஜா என்ற மனைவி உள்ளார். ரவிக்குமாருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒரு டீ கடை இருந்துள்ளது. அங்கு வைத்து அலாவுதீனுக்கும், பூஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடைசியாக ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்ற பிறகு தான் அலாவுதீன் மாயமாகியுள்ளார் என ஆரிஃப் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரவிக்குமார், அவரின் மூத்த மகன் மணிகண்டன், சரண்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அதில் அலாவுதீன் – பூஜா இடையே திருமணம் தாண்டிய உறவு இருந்ததால், கடந்த 2024 ஏப்ரல் மாதம் அலாவுதீனை அழைத்து 3 பேரும் இணைந்து கொலை செய்துள்ளனர்.

மணிகண்டன்
சரண்குமார்

பிறகு மாதேஸ்வரன் மலைப் பகுதியில் அவரின் உடலை எரித்து தடயத்தை அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று எலும்பு துண்டுகளை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி ரவிக்குமார், சரண், மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ளோம்.” என்றனர்.

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பா? - தீவிர விசாரணை

மும்பையில் கடந்த வாரம் அக்தர் உசைனி (60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தன்னை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதாக தெரிவித்துக் கொண்டார். அவரிடம் இதற்கான போலி அடையாள அட்டைய... மேலும் பார்க்க

கோவை: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் கொடுமை; திருடி விட்டு வரும் வழியில் 3 பேர் வெறிச்செயல்

கோவை ஒண்டிப்புதூர் அருகே வினித் என்கிற இளைஞர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் அந்த மாணவி, கோவை ... மேலும் பார்க்க

நூடுல்ஸ், பிஸ்கெட் பாக்கெட்களில் ரூ.42 கோடி மதிப்புள்ள கஞ்சா; தாய்லாந்திலிருந்து மும்பைக்கு கடத்தல்

மும்பைக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மும்பை விமான நிலையத்தில் ரூ.47 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

லண்டன்: ``ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூல... மேலும் பார்க்க

Scam: டிஜிட்டல் கைது, சைபர் அடிமை, பார்ட்-டைம் ஜாப், கடன் செயலி; எத்தனை மோசடி, எப்படி தப்பிக்கலாம்?

இணையதள சேவைகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல வழிகளில் இணைய மோசடிகள் நடைபெற்றுவருகின்றன.இதைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க

மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் எ... மேலும் பார்க்க