செய்திகள் :

நூடுல்ஸ், பிஸ்கெட் பாக்கெட்களில் ரூ.42 கோடி மதிப்புள்ள கஞ்சா; தாய்லாந்திலிருந்து மும்பைக்கு கடத்தல்

post image

மும்பைக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மும்பை விமான நிலையத்தில் ரூ.47 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடத்தல்காரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வரும் பயணிகள் போதைப்பொருள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மும்பை விமான நிலையம்
மும்பை விமான நிலையம்

ஆனால் அவர்களிடம் போதைப்பொருள் எதுவும் இல்லை. எனினும், அவர்களிடம் நூடுல்ஸ் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்கள் இருந்தன. அதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பாக்கெட்களை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவை அனைத்தும் ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா இலைகள் ஆகும். மொத்தம் 42 கிலோ கஞ்சா இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42 கோடியாகும். மொத்தம் 21 பாக்கெட்கள் இருந்தன. அவற்றை கடத்தி வந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் மும்பை விமான நிலையத்தில் ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமானங்கள் மட்டுமல்லாது கப்பல் மூலமாகவும் போதைப்பொருள் மும்பைக்கு கடத்தி வரப்படுகிறது. இப்போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பா? - தீவிர விசாரணை

மும்பையில் கடந்த வாரம் அக்தர் உசைனி (60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தன்னை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதாக தெரிவித்துக் கொண்டார். அவரிடம் இதற்கான போலி அடையாள அட்டைய... மேலும் பார்க்க

கோவை: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் கொடுமை; திருடி விட்டு வரும் வழியில் 3 பேர் வெறிச்செயல்

கோவை ஒண்டிப்புதூர் அருகே வினித் என்கிற இளைஞர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் அந்த மாணவி, கோவை ... மேலும் பார்க்க

லண்டன்: ``ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூல... மேலும் பார்க்க

Scam: டிஜிட்டல் கைது, சைபர் அடிமை, பார்ட்-டைம் ஜாப், கடன் செயலி; எத்தனை மோசடி, எப்படி தப்பிக்கலாம்?

இணையதள சேவைகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல வழிகளில் இணைய மோசடிகள் நடைபெற்றுவருகின்றன.இதைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க

மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் எ... மேலும் பார்க்க

பீகார்: பிரசாந்த் கிஷோர் கட்சி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டு, கார் ஏற்றி படுகொலை - என்ன நடந்தது?

பீஹாரில் வரும் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி தொடர்ந்து நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ராஷ்... மேலும் பார்க்க