Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்க...
TVK : 'கரூரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு!' - தவெக தீர்மானம்!
தவெக-வின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. இந்த பொதுக்குழுவில் கரூரில் திட்டமிடப்பட்டு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தப்பட்டதாக தீர்மானம் வாசித்திருக்கிறார்கள்.

மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து தவெகவின் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் முதல் தீர்மானமே கரூரில் உயிர் நீத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம். அந்த தீர்மானத்தை கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்திருக்கும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனே வாசித்தார். விஜய் அவரை ஆரத்தழுவி வரவேற்று தீர்மானத்தை வாசிக்க அனுப்பி வைத்தார்.

அவர் வாசித்த அந்த தீர்மானம், 'கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வெற்றித் தலைவர் மக்கள் சந்திப்பு பயணங்களை நடத்தினார். தலைவரின் அனல் பறக்கும் பேச்சும் ஆளும் அரசை நோக்கிய கேள்விகளும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது ஆள்வோருக்கு எரிச்சலூட்டியது.
இதனால் கரூரில் திட்டமிட்ட பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தி செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டதோ எனும் அளவுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தது. லட்சியப்பயணத்தில் பங்கெடுக்க வந்த உயிர் நீத்த அவர்களுக்கு பொதுக்குழுவின் இரங்கல்.' என்றார்.

இதேமாதிரி எட்டாவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் விஜய்யின் மக்கள் சந்திப்புகளுக்கு இதுவரை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை. மக்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கும் அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
கரூர் சம்பவத்தில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













