செய்திகள் :

"அதிமுகவில் உள்ள குடும்ப அரசியலால் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு" - இபிஎஸ் மீது செங்கோட்டையன் புகார்

post image

அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இணைந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால், அவரை முதலில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்

“நட்டாற்றில் செங்கோட்டையன்!” - இழுத்துவிட்ட நால்வர்... கைவிட்ட ஐவர்!

அதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "திமுகவைப் போல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களும் வருகிறார்கள். இது நாடே அறிந்த உண்மை" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, "இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" எனக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இது அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தமிழக அரசியலிலும் பேசுபொருளாகியிருந்தது. செங்கோட்டையனை இயக்குவது யார் என்ற கேள்விகளும் விவாதப் பொருளாகியிருந்தன.

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "தேர்தல் ஆணையத்திடம் 250 பக்கத்தில் முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறோம்.

அதை வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

எடப்பாடியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள். அது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கிறது. அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர்கள் யார் என்று வெளியில் சொல்ல முடியாது.

53 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன், என்னை யாரும் இயக்க முடியாது." என்று பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.

இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு 'நேரு'தான் காரணமா? - சசி தரூர் கருத்தும் வரலாறும்!

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்திய வாரிசு அரசியல் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவிலுள்ள வாரிசு அரசியலுக்கு நேருவும் காரணம் எனக் குற்றம்சாட்டி எழுதியிருப்பது ... மேலும் பார்க்க

TVK : 'கரூரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு!' - தவெக தீர்மானம்!

தவெக-வின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. இந்த பொதுக்குழுவில் கரூரில் திட்டமிடப்பட்டு பாதுகாப்பு குறைபாடு ஏற... மேலும் பார்க்க

"இனி எதிரிகளை தோலுரித்துக் காட்டுவதுதான் ஒரே வேலை"-தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் என்.ஆனந்த்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த... மேலும் பார்க்க

`கலைஞரின் குட் புக்; இருவருக்கும் பிடிக்கவில்லை' - மு.பெ.சாமிநாதனின் பொறுப்பு; பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்ட தி.மு.க.-வில் அக்கட்சித் தலைமை அதிரடியாக மாற்றத்தை செய்திருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி, திருப்பூர் தெற்கு மாவட்டச்... மேலும் பார்க்க

New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani?

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி சாதனை வெற்றி பெற்றவர், அமெரிக்காவின் இன்றைய பேசுபொருள்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறந்த நகரமான நியூயார்க்கில், "இவருக்கு வாக்களித்த... மேலும் பார்க்க

SIR: `இது சட்டவிரோதமானதா?' - திமுக குற்றச்சாட்டும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் விளக்கமும்!

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் பணிகளும் தொடங்கிவிட்டது. ... மேலும் பார்க்க