செய்திகள் :

இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! - வரிகள் திரும்ப பெறப்படுமா?

post image

இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஏன் இந்த வரி?

உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை உள்ளது. அமெரிக்கப் பொருள்களுக்கு பிற நாடுகள் அதிக வரிகளை விதிக்கிறது என்று ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வரிகளை ட்ரம்ப் ‘தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977’-க்கு கீழ் தான் நடைமுறைக்கு கொண்டார்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

அதன் பிறகு, இந்த வரிகளின் அமலுக்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கால அவகாசத்தில் உலக நாடுகள் கட கடவென வர்த்தக ஒப்பந்தங்களைப் பேசி முடித்தது. இதனால், ஒப்பந்தங்கள் முடிந்த நாடுகளுக்கு ட்ரம்ப் வரிகளை குறைத்தார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இன்னொரு பக்கம், இந்த வரி உலக நாடுகள் எப்படி பாதிக்கிறதோ, அமெரிக்க மக்களும் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

வழக்கு

இதனையடுத்து, இந்த வரிகளை எதிர்த்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், "தேசிய அவசர நிலையின் போது, அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது" என்று தீர்ப்பு வழங்கினர்.

இதை எதிர்த்து தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் ட்ரம்ப்.

இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை உலகம் உற்றுநோக்கி வருகிறது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம்
அமெரிக்க உச்ச நீதிமன்றம்

அமெரிக்க அரசாங்கம் தயார்

ஒருவேளை, இந்த வழக்கில் வரிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், இதுவரை அமெரிக்கா வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி செலுத்த வேண்டியதாக இருக்கும்.

இதை தவிர்க்க, இந்த வரிகளை அமெரிக்காவிற்குள்ளேயே வைத்துக்கொள்ள பிற வரிச் சட்டங்களை தயார் செய்து வருவதாகவும், கையிலெடுக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேற்கூறிய சட்டங்களுக்கு கீழ், வரி விதிக்க முடியாது என்றாலும், ட்ரம்ப் அரசு வேறு சட்டங்களின் வழியே உலக நாடுகளின் மீது வரிகளை தொடர்ந்து விதிக்குமாம். அதற்கான நடைமுறைகளையும் தயார் செய்துவிட்டது.

ஆக, தயாராக இருங்கள், உலக நாடுகளே!

"ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகி எப்படி வந்தார்?" - ராகுல் காந்தி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதில் ஹரியானாவில் மொத்தம் 25 லட்சம் வாக்குத் த... மேலும் பார்க்க

Aadhav Arjuna full speech | `இன்னும் ஆறே மாசம்தான்' | TVK பொதுக்குழு கூட்டம் | Vijay

மக்களை சாவடிக்கும் அரசியலை கலைஞரிடம் இருந்த சீனியர் அரசியல் தலைவர்கள் செய்ய மாட்டார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த எங்கள் தலைவர் 9 மணியில் இருந்து 6 மணி வரை சாப்பிடாமல் கண்ணீரை மட்ட... மேலும் பார்க்க

Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீது அபராதம்

2025 ஆம் ஆண்டு ஐசிசி ஆசியக் கோப்பைப் போட்டிகளின் போது பல நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று (நவ 4) உறுதிப்படுத்தியது.குறிப்பாக செப்டம்பர் 14, 21 மற்றும் 28 தேத... மேலும் பார்க்க

TVK Vijay Latest Speech | கரூர் சம்பவம் - அவர்கள் வன்மவாதிகள் | தமிழக வெற்றிக் கழகம்

"நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்லமுடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்"- தவெக விஜய் மேலும் பார்க்க

Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த... மேலும் பார்க்க

தவெக கூட்டம்: "கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க"- ஆதவ் அர்ஜுனா

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க