செய்திகள் :

``வாக்குறுதியை முதல்வர் ஏமாற்றிவிட்டார்; மக்கள் என்னை திட்டுகிறார்கள்” - தென்காசி எம்.எல்.ஏ ஆதங்கம்

post image

தென்காசி மாவட்டத்தில், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தி.மு.க சார்பில் கடந்த தேர்தலில் இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் என்பது அடவிநயினார் அணையில் இருந்து வரக்கூடிய உபரி நீரை சுரண்டை முதல் ஊத்துமலை வரை 30 கிராம விவசாய நிலங்களில் பயன்படக்கூடிய வகையில் கால்வாய் அமைக்கக்கூடிய திட்டமாகும்.

இந்தத் திட்டத்திற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூ. 74 கோடி மதிப்பீட்டில் திட்டம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார்
தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார்

ஆனால் இது தொடர்பாக தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களையும் சந்தித்தும் இதுவரை எந்தவித பயனும் இல்லை. தென்காசிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சமீபத்தில் வந்த முதல்வர் இந்த திட்டத்தை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

“தென்காசியின் முதன்மையான வாக்கு உறுதியாக இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்வர் இந்த திட்டத்தை தனது வாயால் பரப்புரையில் கூறினார்.

ஆனால் தற்போது அது நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நான் தென்காசியில் எங்கும் செல்ல முடியவில்லை. நீ எல்லாம் என்ன எம்.எல்.ஏ என்று மக்கள் என்னை கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார்
தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார்

வரக்கூடிய தேர்தலில் மக்கள் வாக்கு சேகரிக்க விடமாட்டார்கள். எனவே இதனை தமிழக முதல்வர் புரிந்து கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இல்லையென்றால், இந்த கால்வாய் அமைக்க தேவையான 97 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி இந்தத் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் போதும்; தானே தனது சொந்த நிதியில் இதனை செய்து முடித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்கிறேன் என ஆதங்கத்துடன் கூறினார்.

மக்கள் மேம்பட நானே இந்த திட்டத்தை எனது சொந்த செலவில் செய்ய தயாராக உள்ளதாகவும், முதல்வர் ஏமாற்றியது வேதனை அளிப்பதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

``செங்கோட்டையன் திமுகவின் பி-டீம்'' - கட்சியில் இருந்து நீக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்புசேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:“... மேலும் பார்க்க

``வெள்ளத்தில் மக்கள் துயரம்; முதலமைச்சர் ஸ்டாலின் சினிமா பார்க்கிறார்'' - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், அ.தி.மு.க கிழக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.டி. ராஜேந்த... மேலும் பார்க்க

குற்றாலம்: முதல்வரை சந்திக்க சுவர் ஏறி குதித்த திமுகவினர்; காவல்துறை திணறல்

பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தென்காசிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்திருந்தார். இந்நிலையில், காலை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குற்றாலம் பகுதியி... மேலும் பார்க்க

நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பால் மரணம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) இன்று காலை உயிரிழந்தார். கொல்லிமலையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உட... மேலும் பார்க்க

``ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்வார் என்று எச்சரித்தார்கள், ஆனால்'' - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மகாராஷ்டிராவில் மறைந்த பால்தாக்கரே தொடங்கிய சிவசேனா கடந்த 2023ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது. அக்கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை இரண்டாக உடைத்ததோடு ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொ... மேலும் பார்க்க

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி, இபிஎஸ் கொடுத்த ரியாக்சன்; அதிமுக - தவெக கூட்டணி?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று... மேலும் பார்க்க