செய்திகள் :

``வெள்ளத்தில் மக்கள் துயரம்; முதலமைச்சர் ஸ்டாலின் சினிமா பார்க்கிறார்'' - ராஜேந்திர பாலாஜி

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், அ.தி.மு.க கிழக்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியபோது, “ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் தொகுதிகள் அதிமுக-வின் எஃகு கோட்டைகள். ராஜபாளையத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம்.

இந்த முறை, அந்த தோல்விக்குப் பதிலாக இருமடங்கு விலை தி.மு.க-விற்கு பரிசாக கொடுக்கப் போகிறோம். இரண்டு தொகுதிகளிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என்ற வரலாற்று சாதனையை படைக்க வேண்டும்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பத்து ஆண்டுகள் நான் அமைச்சராக பணியாற்றிய காலத்தில், கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து கிராமம் தோறும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் செய்தேன்.

அந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உருவாகும் சிறு சிறு பிரச்னைகளையும் கூட தி.மு.க அரசு சரி செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கே தான் அவர்களின் ஆட்சி செயல்படுகிறது.

தி.மு.க ஆட்சி வந்ததிலிருந்து கமிஷன், கலெக்ஷன், கரப்ப்ஷன் ஆகியவை முக்கிய பிரதான காரியங்களாக தி.மு.க கட்சியினரால் நடைபெற்று வருகின்றன.

வீடுகளுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது அதிமுக தான். அப்போது விவசாயிகள் பாதுகாக்கப்பட்டனர். தற்போது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

மழைக்காலத்தில் நெல் விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது. அதை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

நெல் முளைத்து கிடப்பதை பார்த்து டெல்டா மாவட்டத்துக்கு பதறி ஓடுகிறார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளை அழைத்து, அவர்களின் கண்ணீரை துடைத்து, தேவையான உதவிகளை செய்ய சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று கூறி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள்; ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பொழுதுபோக்கு சார்ந்த வேலைகளையே முதலமைச்சர் ஸ்டாலின் செய்கிறார் தவிர, மக்களுக்கான திட்டங்களை செய்வது கிடையாது.

தமிழக மக்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் - அனைவரும் தி.மு.க ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் வெறுப்பில் இருக்கிறார்கள்.
இதை நாம் சரியாக பயன்படுத்தி, வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று தெரிவித்தார்.

குற்றாலம்: முதல்வரை சந்திக்க சுவர் ஏறி குதித்த திமுகவினர்; காவல்துறை திணறல்

பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தென்காசிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்திருந்தார். இந்நிலையில், காலை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குற்றாலம் பகுதியி... மேலும் பார்க்க

நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பால் மரணம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (74) இன்று காலை உயிரிழந்தார். கொல்லிமலையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உட... மேலும் பார்க்க

``ஏக்நாத் ஷிண்டே துரோகம் செய்வார் என்று எச்சரித்தார்கள், ஆனால்'' - உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மகாராஷ்டிராவில் மறைந்த பால்தாக்கரே தொடங்கிய சிவசேனா கடந்த 2023ஆம் ஆண்டு இரண்டாக உடைந்தது. அக்கட்சியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை இரண்டாக உடைத்ததோடு ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொ... மேலும் பார்க்க

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி, இபிஎஸ் கொடுத்த ரியாக்சன்; அதிமுக - தவெக கூட்டணி?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தைக் காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: 2 மாதத்தில் 5 முறை சந்தித்த தாக்கரே சகோதரர்கள் - கூட்டணிக் கட்சிகள் கலக்கம்

மும்பை மாநகராட்சி தேர்தல்மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் கடந்த மூன்று ஆண... மேலும் பார்க்க