செய்திகள் :

கரூர் சம்பவம்: `CBI சம்மனுக்கு நான் நேரில் ஆஜராக போகிறேன்' - செந்தில் பாலாஜி

post image

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது சி.பி.ஐ.

இந்த விசாரணையையொட்டி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது சி.பி.ஐ

இந்தச் சம்மன் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் செந்தில் பாலாஜி பதிவிட்டிருப்பதாவது...

"கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்குப் பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் சம்பவம்
கரூர் சம்பவம்

வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை நேரில் ஆஜராகி இருந்தார்.

இன்று அவரை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'25 நாள்கள் முன்பு சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை!' நெருக்குகிறதா தட்டுப்பாடு?

ஈரான் போரினால் உலகம் முழுவதும் எரிசக்திகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், எரிசக்திகளை இறக்குமதி செய்யும் இந்தியாவின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம். இனி வரும் சூழலைச் சமாளிக்க மத்... மேலும் பார்க்க

திமுக திருச்சி மாநாடு: "பாஜக-வால் ஒருபோதும் தமிழ்நாட்டில் காவி அடிக்க முடியாது" - ஸ்டாலின் ஆவேசம்

திருச்சியில் உள்ள சிறுகனூரில் தி.மு.க சார்பில், 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில் தி.மு.க மாநில மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. 700 ஏக்கரில், 200 ஏக்கர் மாநாட்டு திடலும், 24... மேலும் பார்க்க

விஜய்: ஸ்வீட் பாக்ஸூடன் வந்த 50+ நிர்வாகிகள்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயார்? - பனையூர் அப்டேட்

சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து விஜய் தேர்வு செய்திருக்கும் முக்கியமான 50 க்கும் மேற்பட்ட வேட்பா... மேலும் பார்க்க

'ஈரான் ஏதாவது செய்தால்.! இது சீனாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் 'கிஃப்ட்'' - மிரட்டும் ட்ரம்ப்

ஹார்மோஸ் ஜலசந்தி - இதன் வழியாகத் தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வணிகத்திற்குச் செல்கின்றன... உலகத் தேவையில் 20 சதவிகித எல்.என்.ஜி (LNG) செல்கின்றன. ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போரின... மேலும் பார்க்க

ஈரான் போர் எதிரொலி: சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு புது உத்தரவு

11-வது நாளாக ஈரான் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால், இந்தியா மாதிரியான பெரியளவில் எரிசக்தி இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு. இன்னும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும... மேலும் பார்க்க