செய்திகள் :

கர்நாடகா: பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - 17 பேர் உயிரிழந்த சோகம்

post image

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்காவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தனியார் பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

கர்நாடகா விபத்து
கர்நாடகா விபத்து

பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கி இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார், தீயணைப்புப் படையினர் விரைந்தனர்.

நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பற்றியதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் தற்போது வரை 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பலத்தக் காயம் அடைந்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகா விபத்து
கர்நாடகா விபத்து

விபத்து அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்து இருக்கிறது. இந்த விபத்துக்கு லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! - விவரம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ வீரர்களும், உள்ளூர் நிர்வாகக் குழுக்களும் உடனே சம்பவ இ... மேலும் பார்க்க

கோவையில் 80 அடி உயரத்தில் பழுதான ரோலர் கோஸ்டர்! - 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

கோவை கொடிசியா மைதானத்தில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீருற்று மற்றும் பல்வேறு விதமான ராட்டினங்கள் வைக்கப்பட்டுள்ளன.கோவ... மேலும் பார்க்க

ஹீலியம் சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்? தொடர் விபத்துகளால் பலூன் வியாபாரிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை

கடற்கரை, வணிக வீதிகள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தவறாமல் இடம்பிடிப்பவை `ஹீலியம்' வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள். குழந்தைகள் மட்டுமல்ல பல நேரங்களில் பெரியவர்களும் ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: "விசித்திரமான விபத்து" - மோதிக்கொண்ட ரயில்கள்; 21 பேர் பலி; அரசு சொல்வது என்ன?

ஸ்பெயினில் நேற்று இரவு இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து தென் ஸ்பெயினில் உள்ள அடமுஸ் நகரத்திற்கு அருகே நடந்துள்ளது.மலகாவில் இருந்து மாட்ரிட்டிற்குச் சென்று கொண்டிருந்த அதி... மேலும் பார்க்க

ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித... மேலும் பார்க்க

MSC ELSA 3: கடலில் மூழ்கிய லைபீரியக் கப்பல்; சிறைப்பிடித்த கேரள அரசு; ரூ.1227 கோடி செலுத்தி மீட்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்குச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக... மேலும் பார்க்க