செய்திகள் :

தொடரும் போர் பதற்றம்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு?

post image

ஈரான் மீதான போர் உச்சகட்டத்தில் நீடிக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் - அமெரிக்கா ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட அயதுல்லா கமேனியுடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தியும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அயதுல்லா அலி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும், அடக்கம் செய்வதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.

அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகான நியமிக்கப்பட்ட வாரிசு இல்லை என்பதால், அயதுல்லா அலிரேசா அராஃபி, ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், தலைமை நீதிபதி கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் இடைக்கால தலைமைத்துவக் குழு, அடுத்த உச்சத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது.

மொஜ்தபா ஹொசைனி கமேனி
மொஜ்தபா ஹொசைனி கமேனி

இஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பல துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளைத் தாக்கின. ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், அயதுல்ல அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் நிபுணர்கள் சபையால் அவர் கமேனியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

TVK : `ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி' - தஞ்சை கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்!

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று (புதன்கிழமை - மாா்ச் 4) நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விமானத்தில் திருச்சி... மேலும் பார்க்க

'அதிர்ச்சி சரிவு' 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன?

வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே - ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில... மேலும் பார்க்க

மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! - மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?

ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின... மேலும் பார்க்க