செய்திகள் :

காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை; போலீஸ் குவிப்பு; என்ன நடந்தது?

post image

காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

அதைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா புறப்படத் தயாரானது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கானா பாடல்களை ஒலிபரப்பக் கோரி தகராறில் ஈடுபட்டனர். அதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இரண்டு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

கொலை செய்யப்பட்ட நீலகண்டன்
கொலை செய்யப்பட்ட நீலகண்டன்

இதையடுத்து சந்துரு, விக்கி (எ) நீலகண்டன் ஆகிய இருவர் அந்தப் பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்ப போலீஸார் முயன்றார். அப்போது இளைஞர்களின் உறவினர்கள், போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்காததே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. ஒன்றரை மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சடலங்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரித்தார். மேலும் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி. அரவிந்த் உத்தரவிட்டார். கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட நீலகண்டன், வெல்டிங் வேலை செய்து வந்தார். சந்துரு, கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தநிலையில் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அதுதொடர்பாக சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

குமரி: போன் பயன்படுத்தியதால் ஆசிரியர் கண்டிப்பு? 3வது ​மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெத்லகேம் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பெத்லகேம் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்றுவந்த கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை ... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர், கொலை மிரட்டல்; இளைஞர் கைது

சென்னை, புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் ஒருவர், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அஜுமுதீன் என்பவரும் காதலித்து வந்தனர்.இந்தநிலையில், இருவருக்கும் கரு... மேலும் பார்க்க

"சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்ப முடியாது" - அடிதடி வழக்கில் அமைச்சர் மரிய வில்சனுக்கு உத்தரவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற மரியவில்சன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கிறார். இவரது உடன்பிறந்த தம்பியான... மேலும் பார்க்க

"என் மனநிலையைப் பாழாக்கிவிட்டாய்" - தேனிலவில் மாதவிடாய் எனச் சொன்ன மனைவியைக் கொல்ல முயன்ற கணவன்

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு 2023ம் ஆண்டு நிகில் என்பவருடன் திருமணம் நடந்தது. அத்திருமணம் முடிந்தவுடன் தம்பதியினர் அந்தமான் நிகோபார் பகுதிக்கு தேனிலவு சென்றனர். ஆனால் தேனில... மேலும் பார்க்க

விசிக-வினர் சாலை மறியல்; கடக்க முயன்ற இளைஞர் - தாக்கிய போலீஸை திருப்பி அடித்த இளைஞர்; நடந்தது என்ன?

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மற்றும் அக்கட்சி மாநாட்டிற்காக நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

சிலீப்பர் டிக்கெட்டில் ஏ.சியில் பயணம்: தட்டிக்கேட்ட டி.சி, ரயில்வே பாதுகாவலரை பிளேடால் தாக்கிய நடிகை

மும்பையில் டிவி தொடர்கள், வெப்சீரியஸ்களில் நடித்து வருபவர் அந்தரா பானர்ஜி(31). மும்பை அருகில் உள்ள தானேயில் வசிக்கும் அந்தரா பானர்ஜி, பாந்த்ரா-கங்காநகர் ஆரவலி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெப் சீரிஸ் ஒன்றின் பட... மேலும் பார்க்க