செய்திகள் :

காதலனை கரம்பிடிக்க பாலில் விஷம் கலந்து தந்தையை கொன்ற மகள் - குடும்ப சண்டையில் காட்டிக்கொடுத்த கணவன்

post image

காதலனை கைபிடிக்க, சொந்த தந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையின் வேலையில் சேர்ந்த மகள் 3 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராப்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயந்த் பல்லவார். கான்ஸ்டபிளான இவர் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி அங்குள்ள கோர்ட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். அது ஒரு இயற்கையான மரணம் என்று கருதி பிரேத பரிசோதனை செய்யாமல் ஜெயந்த் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது.

காட்டிக்கொடுத்த மாஜி கணவன்

ஜெயந்த் மரணத்திற்கு பிறகு அவரது மகள் ஆர்யா தனது காதலன் ஆசிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமாகி சிறிது நாட்களில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டனர். மற்றொருபுறம் ஜெயந்த் இறந்ததால் அவரது மகள் ஆர்யாவிற்கு போலீஸ் வேலை கிடைத்தது. தற்போது அவர் பயிற்சியில் இருக்கிறார்.

கணவன் மனைவி சண்டையால் ஆர்யா தனது கணவனை விட்டுவிட்டு தனது பெற்றோர் வீட்டில் வந்து வசித்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த ஆசிஷ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்த்தை அவரது மகள் விஷம் கொடுத்து கொலை செய்ததாக போலீஸில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து இவ்வழக்கை போலீஸார் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தனர். விசாரணையில் அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.

பாலில் விஷம் கலந்து கொடுத்த மகள்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ஆர்யாவின் காதலுக்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து ஜெயந்த்தை கொலை செய்ய ஆர்யாவும், அவரது காதலனும் சேர்ந்து முடிவு செய்தனர். இதற்காக ஆர்யா தனது உறவினர் சைதன்யா என்பவரை தொடர்பு கொண்டு ரூ.5 ஆயிரம் கொடுத்து விஷம் வாங்கி வரச்சொன்னார். அந்த நபரும் விஷம் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார். 2023ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ஜெயந்த் வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தார். அந்த நேரம் ஆர்யா தனது தந்தைக்கு ஆசையாக மில்க்‌ஷேக் கொண்டு வந்து கொடுத்து குடிக்கும்படி சொன்னார்.

வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஜெயந்த் தனது மகள் கொடுத்த பாலை வாங்கி குடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் பாலில் ஆர்யா விஷம் கலந்து இருந்தார். ஜெயந்த் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றபோதுதான் லேசான மயக்கம் வருவது போன்று உணர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கிவிழுந்து இறந்துவிட்டார். இக்கொலை தொடர்பாக ஆர்யா, ஆசிஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிஷ் போலீஸ் பயிற்சியில் இருந்தபோது நடத்தை சரியில்லாமல் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தகாத ஆசைக்கு இணங்கமறுத்த பணிப்பெண்; குத்திக் கொலைசெய்துவிட்டு ஆந்திராவிற்கு ஓடிய மும்பை டிவி நடிகர்!

மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை செய்தபோது அடிக்கடி ஆசிஷ் பாலியல் த... மேலும் பார்க்க

எரிவாயு பற்றாக்குறை: `கேஸ் இணைப்பை துண்டிப்போம்' என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி... உஷார்!

ஈரான் போரால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சமையல் எரிவாயுவிற்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டர் பற்றாக... மேலும் பார்க்க

பெங்களூரு: இஸ்லாமிய மாணவனை 'தீவிரவாதி' எனத் திட்டிய பேராசிரியர்; வீடியோவால் வெளிவந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில், வகுப்பு நேரத்தில் இஸ்லாமிய மாணவர் ஒருவரை பேராசிரியர் ஒருவர் ‘தீவிரவாதி’ என்று திட்டி, மத ரீதியான வெறுப்புக்கருத்துக்களை உமிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் குற்றச்சாட்டு - போலீஸ் விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்... மேலும் பார்க்க

`பிள்ளைகளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்துவிட்டு' - மனதை ரணமாக்கும் காஞ்சிபுரம் சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஷம்சியா (26). இவருக்கு ஆஷிபா (8), அப்தர் (5) என இரண்டு குழந்தைகள். ஷம்சியாவின் கணவர் ஆசிப் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கடன் தொல்லையால்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: "என் தங்கமே, என்னை விட்டு போய்ட்டியே" - ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகேயுள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் 13 வயது மகன் பார்த்திபன், பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தான். திரு.வி.க நகர் ஒன்றாவது தெர... மேலும் பார்க்க