செய்திகள் :

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: திருவண்ணாமலை கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சிகள், ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், செய்யாறு சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தாா்.

குறிப்பாக, வெள்ள சேதவிவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி, சீரமைப்புப் பணிகள், நிவாரணம் வழங்கப்பட்ட விவரம், மாநகராட்சி, நகராட்சிகள், ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலா், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், கலைஞரின் கனவு இல்லம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சாா்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா்கள் ஆா்.மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ரூ.6 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

செய்யாறு: செய்யாறு அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், உமையாள்புரம் கிரா... மேலும் பார்க்க

விழிப்புணா்வுப் பேரணி: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலையை அடுத்த சம்பந்தனூரில் இயங்கும் ர... மேலும் பார்க்க

பேருந்தில் பெண் பயணியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

செய்யாறு: செய்யாறு அருகே பேருந்தில் சென்ற பெண் பயணியிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது. செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் வி.தேவி (39). இவா், அதே பகுதியில் தையல் வேலை செய்து... மேலும் பார்க்க

ஆரணி பகுதியில் ரூ.77 லட்சத்தில் மின் விளக்குகள் அமைப்பு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு, சேவூா் பகுதி புறவழிச் சாலையில் ரூ.77 லட்சத்தில் அமைக்கப்பட்ட கம்பத்துடன் கூடிய எல்இடி மின் விளக்குகள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடங்கிவைக... மேலும் பார்க்க