செய்திகள் :

பீகார்: திடீரென விவசாயியின் வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 கோடி; என்ன நடந்தது?

post image

பீகாரில் மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள தேவ்கஞ்ச் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரிதா. விவசாயி மனைவியான ரிதா எப்போதாவதுதான் வங்கி பக்கமே செல்வார். சமீபத்தில் தனது வங்கிக் கணக்கில் பணம் எடுக்க உள்ளூர் வங்கிக்குச் சென்றார். ஆனால் அங்கு வங்கி மூடப்பட்டு இருந்தது. இதனால் வங்கிக்கு வெளியில் இருந்த ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கலாம் என்று சென்றார்.

அவர் தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டார். வங்கிக்கணக்கில் ரூ.9,99,49,588 இருப்பதாகக் காட்டியது.

ATM
ATM

அதனை நம்ப முடியாமல் வேறு ஒரு ஏ.டி.எம்மிற்குச் சென்று மீண்டும் ஒரு முறை எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தார். அப்போதும் அதே தொகையைத்தான் காட்டியது. இதையடுத்து இது குறித்து தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் ரிதா தெரிவித்தார். குடும்பத்தில் சிலர் பணத்தை எடுத்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

ஆனால் பணம் எப்படி தனது வங்கிக் கணக்கிற்கு வந்தது என்று தெரியாமல் அந்தப் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுத்து செலவு செய்ய மாட்டேன் என்று ரிதா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதோடு ரிதாவும், அவரது குடும்பத்தினரும் இது குறித்து வங்கியில் தெரிவிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் வங்கி விடுமுறையால் மூடப்பட்டு இருந்தது.

இதையடுத்து வங்கி திறக்கப்பட்டபோது வங்கிக் கணக்கில் பணம் வந்திருப்பது குறித்து ரிதா தெரிவித்தார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று வங்கி மேலாளர் ரிஷ்காந்த் தெரிவித்தார்.

அதோடு அவரது வங்கிக்கணக்கில் இருந்த பணம் திரும்ப எடுக்கப்பட்டது. தனக்கு வந்த பணத்தைச் செலவு செய்யாத ரிதாவின் செயலை வெகுவாகப் பாராட்டினர்.

தெலங்கானா: நிறைவேறாத காதலால் தற்கொலை; இறந்த மகனுக்கு 23 ஆண்டுகளாக திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

தெலங்கானாவில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மகபூபாபாத் மாவட்டத்தில், 2003ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன் ராம் கோட்டிக்கு, லாலு... மேலும் பார்க்க

ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரால் ஈரான் தனது எல்லைக்கு உட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. ... மேலும் பார்க்க

பர்கர் சலுகை; ஸ்தம்பித்த கடைகள் - ஊழியர்களின் உழைப்புக்கு ₹15 கோடி போனஸ் வழங்கி நெகிழ்ந்த நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பர்கர் நிறுவனமான 'ஃபைவ் கைஸ்' (Five Guys), தனது ஊழியர்களுக்கு சுமார் 1.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹15 கோடி) போனஸ் வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளது.நிறுவனத்தின் சிற... மேலும் பார்க்க

சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் இஸ்ரேல் கடுமையான ஏவுணணைத்... மேலும் பார்க்க

"மாதவிடாய் விடுமுறை வேண்டாம்" - கர்நாடகா அரசின் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பெண்கள் மனு

பெண்களுக்குச் சில மாநில அரசுகள் மாதவிடாய் கால விடுமுறை வழங்கி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் கூட மாதத்தில் ஒருநாள் இதற்காக பெண்களுக்கு விடுமுறை கொடுக்கின்றன. ஆனால் இந்த மாதவிடாய் கால விடுமுறை தங்க... மேலும் பார்க்க

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை... டாலர் கரன்சியில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அவரது பொருளாதார கொள்கை உலக நாடுகளை மட்டுமல்லாது அமெர... மேலும் பார்க்க