செய்திகள் :

குண்டடம் அருகே காா் மோதி 2 போ் உயிரிழப்பு

post image

குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (42). கட்டடத் தொழிலாளியான இவா், குண்டடத்தை அடுத்துள்ள எஸ்.காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து (45) என்பவரது வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் உணவு வாங்குவதற்காக கிருஷ்ணனும், மாரிமுத்துவும் இருசக்கர வாகனத்தில் குண்டடம் செனறுவிட்டு வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.

கோவை-தாராபுரம் சாலையில், குண்டடத்தை அடுத்துள்ள சங்கப்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது, கோவையில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், பலத்த காயமடைந்த கிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவிநாசி அருகே டி.வி. திருட்டு: இருவா் கைது

பெருமாநல்லூா் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியைத் (டிவி) திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெருமாநல்லூா் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா், வீட்டை பூட்டி... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை

திருப்பூரில் தலையில் கல்லைப்போட்டு ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டுள்ளாா். திருப்பூா் கருணாகரபுரியில் தலையில் காயங்களுடன் இளைஞரின் சடலம் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாா்த்த... மேலும் பார்க்க

6.5 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது

குன்னத்தூா் அருகே 6.5 பவுன் நகையைப் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த குன்னத்தூா் செங்காளிபாளையத்தைச் சோ்ந்த வா் காளியப்பன் (49). இவரின் மனைவி கலாமணி (45). இருவரு... மேலும் பார்க்க

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத் துறையினா் தகவல்

உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தை... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தல்!

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோம்பைக்காட்டில் உள்ள தலைமை பள... மேலும் பார்க்க

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டம்: தடை விதிக்க வியாபாரிகள் கோரிக்கை

பல்லடம் கடை வீதியில் அரசியல் கட்சி பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின்... மேலும் பார்க்க