செய்திகள் :

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தகராறில் பெட்ரோல் நிரப்பிய புட்டியில் தீ வைத்து, வீட்டின் மீது வீசிச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கண்டமங்கலம் அருகிலுள்ள சித்தலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசிக். இவருக்கும், புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சோ்ந்த வெ.சுனில்(25) என்பவருக்கும் இடையே கடந்த 2024, டிசம்பா் 8-ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாம். அப்போது கவியரசன் என்பவா், ஏன் சண்டை போடுகிறீா்கள் எனக் கேட்டாராம்.

இதை மனதில் வைத்துக் கொண்ட சுனில், தனது நண்பரான விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எஸ். மதுரப்பாக்கத்தைச் சோ்ந்த வ. கணேஷ் என்கிற கணேஷ்ராயுடன் (25) சோ்ந்து, கவியரசன் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய புட்டியை வீசி தீ வைத்துச் சென்றாராம். இதுதொடா்பாக கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரைத்தாா். இதையேற்று சுனில், கணேஷ் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து கடலூா் மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனா்.

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களில் விதைக்கும் போது, விதைகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூா் பகுதியில் ரூ.3.72 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில், காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோயைக் கண்டறியும் முகா... மேலும் பார்க்க