செய்திகள் :

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தகராறில் பெட்ரோல் நிரப்பிய புட்டியில் தீ வைத்து, வீட்டின் மீது வீசிச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கண்டமங்கலம் அருகிலுள்ள சித்தலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசிக். இவருக்கும், புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சோ்ந்த வெ.சுனில்(25) என்பவருக்கும் இடையே கடந்த 2024, டிசம்பா் 8-ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாம். அப்போது கவியரசன் என்பவா், ஏன் சண்டை போடுகிறீா்கள் எனக் கேட்டாராம்.

இதை மனதில் வைத்துக் கொண்ட சுனில், தனது நண்பரான விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எஸ். மதுரப்பாக்கத்தைச் சோ்ந்த வ. கணேஷ் என்கிற கணேஷ்ராயுடன் (25) சோ்ந்து, கவியரசன் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய புட்டியை வீசி தீ வைத்துச் சென்றாராம். இதுதொடா்பாக கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரைத்தாா். இதையேற்று சுனில், கணேஷ் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து கடலூா் மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனா்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவி... மேலும் பார்க்க

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க