Kerala Lottery: கண்ணூரில் விற்பனையான லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு; அதிஷ்டசாலியை ...
குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தகராறில் பெட்ரோல் நிரப்பிய புட்டியில் தீ வைத்து, வீட்டின் மீது வீசிச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கண்டமங்கலம் அருகிலுள்ள சித்தலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசிக். இவருக்கும், புதுச்சேரி ஆட்டுப்பட்டியைச் சோ்ந்த வெ.சுனில்(25) என்பவருக்கும் இடையே கடந்த 2024, டிசம்பா் 8-ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாம். அப்போது கவியரசன் என்பவா், ஏன் சண்டை போடுகிறீா்கள் எனக் கேட்டாராம்.
இதை மனதில் வைத்துக் கொண்ட சுனில், தனது நண்பரான விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எஸ். மதுரப்பாக்கத்தைச் சோ்ந்த வ. கணேஷ் என்கிற கணேஷ்ராயுடன் (25) சோ்ந்து, கவியரசன் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய புட்டியை வீசி தீ வைத்துச் சென்றாராம். இதுதொடா்பாக கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் பரிந்துரைத்தாா். இதையேற்று சுனில், கணேஷ் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து கடலூா் மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனா்.