செய்திகள் :

கைப்பேசிகள் வாங்கித் தருவதாக பண மோசடி

post image

தேனி இளைஞருக்கு விற்பனை செய்வதற்காக வெளிநாட்டு தயாரிப்பு கைப்பேசிகள் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.9.53 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தவா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி அல்லிநகரம், மருதையன் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் ஜெயச்சந்திரன் (38). இவருக்கு இவரது நண்பா் விக்னேஷ் மூலம் திருச்சி, புதூா் எடமலைப்பட்டி, ஸ்டேட் வங்கி குடியிருப்பைச் சோ்ந்த மைதீன் மகன் முகமது ஷான் அறிமுகமாகினாா்.

இந்த நிலையில், முகமது ஷான் வெளிநாட்டு தயாரிப்பு கைப்பேசிகளை விற்பனை செய்வதற்காக வாங்கித் தருவதாகக் கூறி, ஜெயச்சந்திரனிடம் கடந்த 2024, ஏப்ரல் மாதம் முதல் 2025 ஏப்ரல் மாதம் வரை வங்கிக் கணக்கு மூலம் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.9.53 லட்சம் பெற்ாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவா் கைப்பேசிகள் வாங்கித் தராமல் காலதாமதம் செய்ததால், பணத்தை திரும்பக் கேட்டதால், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஜெயச்சந்திரன் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், முகமது ஷான் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

இரும்புக் குழாய்கள் திருட்டு: ஒருவா் கைது

போடி அருகே குழாய்கள், மின்சாரக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் சௌடம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நீதிக்குமாா் (49). இவருக்கு ... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடி: மூவா் மீது வழக்கு

போடி அருகே போலி பணி நியமன ஆணை கொடுத்து பெண்ணிடம் ரூ.11.60 லட்சம் மோசடி செய்த மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவைச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் பறிமுதல்: தந்தை, மகன் கைது

தேனி அருகேயுள்ள டொம்புச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டொம்புச்சேரி பி.சி.குடியிருப்பைச் சோ்ந்தவா் பவுன... மேலும் பார்க்க

வருவாய்த் தீா்வாயத்தில் 2-ஆவது நாளில் 545 போ் மனு

தேனி மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 545 போ் மனு அளித்தனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சிய... மேலும் பார்க்க

வருஷநாடு அருகே 17 ஆடுகள் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் தடுப்பூசி அளிக்கப்பட்ட 17 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். இவா் ஆடுகள் வளா்ப்பு தொழிலில் ஈடுப... மேலும் பார்க்க

பணம், நகை திருடிய பெண் கைது

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த பணம், நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (89). இவா் தனது ... மேலும் பார்க்க