செய்திகள் :

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

post image

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார். என்ன காரணம்?

Vijay
Vijay

தவெக தலைவர் விஜய் இன்று காலை பெரம்பூரின் அம்பேத்கர் கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த உடனேயே பிரசார வேனில் ஏறிவிட்டார். பிரசாரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்த முதல் ஸ்பாட்டான பெரம்பூர் விவேகானந்த ரோடை மதியம் 1 மணிக்கு மேல் எட்டினார்.

வழிநெடுகும் விஜய்யின் தொண்டர்கள் சூழ்ந்ததால் விஜய்யின் வாகனம் ஊர்ந்து ஊர்ந்தே நகர்ந்தது. பெரம்பூரில் பேசி முடித்துவிட்டு கொளத்தூருக்கு விஜய் சென்றார். பெரம்பூரிலிருந்து கொளத்தூருக்கு விஜய் செல்ல 3 மணி நேரம் ஆனது. கொளத்தூரில் அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால், அசம்பாவிதங்களை தவிர்க்க விஜய்யை காவல்துறையினர் சீக்கிரம் பேசி முடிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி விஜய்யும் 2 நிமிடங்களில் பேசி முடித்தார்.

வில்லிவாக்க கூட்டம்
வில்லிவாக்க கூட்டம்

இதேவேளையில் மூன்றாவது ஸ்பாட்டான வில்லிவாக்கத்திலும் விஜய்யின் பிரசாரத்தை பார்க்க எக்கச்சக்கமான பேர் கூடியிருந்தனர். விஜய் கொளத்தூரை எட்டிய சமயத்திலேயே தவெகவின் முக்கிய நிர்வாகயான சி.டி.ஆர்.நிர்மல் குமாகுமார் 'காவல்துறை எங்களின் பிரசாரத்துக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை' என தேர்தல் ஆணையத்துக்கு புகார் ஒன்றை கொடுத்தார்.

இந்நிலையில் கொளத்தூரிலிருந்து விஜய் நேராக வில்லிவாக்கம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். வில்லிவாக்கம் தொகுதியின் மாவட்டச்செயலாளர் பூக்கடை குமார் பேசுகையில், 'தலைவரால் கொளத்தூருக்குள்ளேயே செல்ல முடியவில்லை. காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுக்கவில்லை. வில்லிவாக்கத்தில் மாலை 6 மணி வரைதான் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருக்கிறோம். நெரிசலில் தலைவர் வந்து சேர 8 மணி ஆகும் போல தெரிகிறது. அதனால் பிரசாரத்தை ரத்து செய்கிறோம். இன்னொரு நாள் தலைவர் உங்களை சந்திப்பார்' என்றார்.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க