செய்திகள் :

`2016 தேர்தலில் நடந்ததுதான் இப்போதும்...' - தலைமையின் முடிவால் புலம்பும் பாபநாசம் உடன்பிறப்புகள்!

post image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத தொகுதிகளில் ஒன்று பாபநாசம். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் திமுக இங்கு நேரடியாக போட்டியிட்டது. அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளுக்குத்தான் திமுக தலைமை இங்கு வாய்ப்பு கொடுக்கிறது. சொல்லப்போனால் திமுக இந்த தொகுதியில் நேரடியாக வெற்றி பெற்று 55 ஆண்டுகள் ஆகிவிட்டது. இம்முறை திமுக-வுக்கு தொகுதி சாதகமாக இருந்தும் கூட்டணிக்கு தாரை வார்த்து விட்டதால், வாய்ப்பு கை நழுவி போகும் நிலை ஏற்படும் என பாபநாசம் உடன் பிறப்புகள் மனப்புழுக்கத்தில் உள்ளனர். எளிதாக வெல்ல வேண்டிய தொகுதியை அதிமுக கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அதிமுக -சண்முக பிரபு

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ``பாபநாசம் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜவாஹிருல்லா உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இம்முறை திமுக நேரடியாகப் போட்டியிட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் விரும்பினர். முத்துச்செல்வம், அய்யாராசு, கலைச்செல்வன், தாமரைச்செல்வன், பாவை ஹனீபா உள்ளிட்ட பலரும் விருப்ப மனு அளித்திருந்தனர். தொகுதிக்குள் எடுத்த சர்வேயிலும் திமுக போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

இந்தச் சூழலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் திமுக-வினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான், அதிமுக-வில் அய்யப்பன் என்கிற சண்முக பிரபு, தவெக-வில் அசாருதீன் உதுமான் அலி, நாம் தமிழர் கட்சியில் அனீஸ் பாத்திமா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுக-வில் போட்டியிடும் சண்முக பிரபு அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த துரைக்கண்ணு மகன். தேர்தலுக்காக வைட்டமின்களை தயாராக வைத்திருக்கிறாராம்.

திமுக கூட்டணியில் ஷாஜகான்

இரண்டு மாதங்களுக்கு முன்பு தனக்கு சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக குலதெய்வ கோயிலில் வழிப்பட்டவர், கிடா வெட்டி பெரிய அளவில் விருந்து வைத்திருக்கிறார். சண்முக பிரபு நினைத்தது போல் அவருக்கு சீட் கிடைத்து விட்டது. மண்ணின் மைந்தன் என்பதை முன்னெடுத்து பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். மற்ற கட்சிகளைச் சேர்ந்த ஷாஜகான், அசாருதீன் உதுமான் அலி, அனீஸ் பாத்திமா ஆகியோர் பாபநாசம் தொகுதியை சேர்ந்தவர்கள் கிடையாது. வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் சண்முக பிரபு காட்டில் அடை மழை.

இப்போதே வெற்றி தனக்கு தான் என்பது போல் தோரணையாக வலம் வருகிறார். ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து எல்லோரையும் கரைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு சாதகமாக இருந்த தொகுதிகளில் பாபநாசமும் ஒன்று. விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலில், தலைவரே யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள், ஆனால் நாம்தான் நேரடியாக களமிறங்க வேண்டும், தொகுதி மக்களும் இதை தான் விரும்புகின்றனர் என கோரஸாக கூறினர்.

தவெக- அசாருதீன் உதுமான் அலி

இதன் பிறகும் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்குச் சென்றது. 2021ல் வென்று எம்.எல்.ஏ-வான ஜவாஹிருல்லா வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தொகுதிக்குள் இல்லை என்பதே பரவலான குற்றச்சாட்டாக மக்கள் முன் வைத்தனர். இப்போது திமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஹாஜகான் ஆடுதுறையைச் சேர்ந்தவர். கடந்த எம்.பி தேர்தலில் பாசநாசம் தொகுதி அடங்கிய மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதா வெற்றி பெற்றார்.

இப்போது சுதா தொகுதிக்குள் வருவதே இல்லை. இதனால் பாபநாசம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோகநாதன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதிமுக-வில் மறைந்த துரைக்கண்ணு வெற்றி பெற்றார். அப்போது திமுக போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். இதே போல் தற்போது திமுக போட்டியிடாததால் தொகுதியை அதிமுக கைப்பற்றுவதற்கான சூழல் அமைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி- அனீஸ் பாத்திமா

திமுக தலைமை உடனடியாக இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். மறுபரிசீலனை செய்து திமுக-வைச் சேர்ந்த ஒருவரை களமிறக்க வேண்டும். இல்லை என்றால் தொகுதியின் வெற்றி கானல் நீராகி விடும். திமுக-வின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் ஒத்த கருத்துடன் இதை சொல்கிறோம். யாரையாவது வைத்து கள நிலவரத்தை தலைமை அறிய வேண்டும். அதன் பிறகு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் பாபநாசம் திமுக-வினரின் எண்ணமாக இருக்கிறது" என்றனர்.

`5 லட்சத்திற்கு வங்கிக் கடன்; அசையா சொத்து ரூ.39 லட்சம்' - வெளியான சீமானின் வேட்புமனு விவரம்

காரைக்குடியில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று ( மார்ச். 30) வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி சீமான் கையில் 50,... மேலும் பார்க்க

தேர்தல்: 'தனித்தொகுதி' Vs 'பொதுத்தொகுதி' - என்ன கணக்கு... எப்படி உருவானது?!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு இழுபறிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து, வேட்பாளர் பட்டியல்களும் ... மேலும் பார்க்க

Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்... மேலும் பார்க்க

Vijay: 'BMW உள்ளிட்ட 5 கார்கள், 1 TVS XL ' - வெளியான விஜய்யின் வாகனங்களின் லிஸ்ட்!

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அ... மேலும் பார்க்க

Tvk Vijay: 'அசையும் சொத்து 404 கோடி; அசையா சொத்து.!'- வெளியான விஜய்யின் வேட்புமனு விவரம்

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அ... மேலும் பார்க்க

'கொளத்தூருக்குள் செல்லவே முடியவில்லை; வில்லிவாக்கத்தில் பிரசாரம் கேன்சல்!' - என்ன சொல்கிறது தவெக?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் மூன்று இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பூர், கொளத்தூரில் பிரசாரம் செய்த விஜய், வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய முடியாமல் கூட்டத்தை... மேலும் பார்க்க