செய்திகள் :

பைக்கர்: 18 வயது இளைஞனாக மாறிய 41 வயது நடிகர்; '2 ஆண்டுக்கால கடின உழைப்பு' - நடிகர் சர்வானந்த்

post image

இயக்குநர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில், மோட்டோகிராஸ் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பைக்கர்'. இப்படத்திற்காக நடிகர் சர்வானந்த் மேற்கொண்ட அதிரடி உடல்மாற்றமும், அதன் பின்னணியில் உள்ள உழைப்பும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததிலிருந்து நடிகர் சர்வானந்த் உடல்மாற்றம் பேசப்பட்டு வருகிறது. 41 வயது நடிகர் எப்படி 18 வயது இளைஞர் போன்ற தோற்றத்துக்கு மாறினார் என்பது குறித்த கேள்விகள் அவரைப் பின் தொடர்ந்தன.

சர்வானந்த்
சர்வானந்த்

இந்த நிலையில், சமீபத்தில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், தன் உடல் மாற்றம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். அவர் பேட்டியில், ``பைக்கர் படத்தில் 18 வயது பைக் ரேஸராகத் தோன்றுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக என் வாழ்க்கையையே மாற்றியமைத்தேன்.

தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, ஓட்டம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டேன். இந்தப் பயணம் எனக்கு எளிதாக இருக்கவில்லை. மன அழுத்தம் மற்றும் சுய சந்தேகம் எழுந்தபோது, 'யோகா' மூலம் மனதை அமைதிப்படுத்தி இலக்கை நோக்கிப் பயணித்தேன்.

சர்வானந்த்
சர்வானந்த்

இதன் விளைவாக, உடல் மெலிந்து, கட்டுக்கோப்பான ஒரு வீரரைப் போல மாறினேன். படப்பிடிப்பின் முதல் நாள் கண்ணாடியில் என்னைப் பார்த்தபோது, ஒரு ஒழுக்கமான, புதிய மனிதனை என்னால் பார்க்க முடிந்தது. நாம் எவ்வளவு சோர்ந்து போயிருந்தாலும், ஒரு சரியான முடிவு நம் வாழ்க்கையை அப்படியே மாற்றும் என்பதை இந்தப் பயணம் எனக்குக் கற்றுக்கொடுத்தது. ஏப்ரல் 3-ம் தேதி திரையில் 'விக்கி'யைப் பார்க்கும்போது, அது வெறும் நடிப்பு மட்டுமல்ல, எனது இரண்டு ஆண்டுக்கால ரத்தம் மற்றும் வியர்வையின் பலன் என்பதை ரசிகர்கள் உணர்வார்கள்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Peddi: "அப்போது சைவ உணவு மட்டுமே" - ராம் சரணின் மல்யுத்த வீரருக்கான உடலமைப்பிற்கு பின்னிருக்கும் கதை

ராம் சரண் நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த ரிலீஸ் தேதியிலிருந்து படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் எனப் பேசப்படுகிறது. அது... மேலும் பார்க்க

Chiranjeevi: "சூர்யா, கல்விக்காக செய்பவை எனக்கு ஊக்கமளிக்கின்றன!" - புதிய முயற்சியில் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தற்போது 'விஸ்வம்பரா' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத... மேலும் பார்க்க

Rashmika: 'நான் கடந்து வந்த பாதை நீண்டது..!' - மாநில விருதை பெற்ற ராஷ்மிகா நெகிழ்ச்சி

தெலங்கானா மாநில அரசின் 'Gaddar' திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று (மார்ச்.19) நடந்தது. இதில் 'தி கேர்ள் ஃபிரெண்ட்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ராஷ்மிகா மந்தனா பெற்றார். ... மேலும் பார்க்க

"என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன், ஆனால் இன்று..!"- மாநில விருது வாங்கிய ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவருடன் நடிகர் தீக்சித் ஷ... மேலும் பார்க்க

Sreeleela: "சினிமாவில் 'டாக்டர்' ஸ்ரீலீலா அல்ல; வெறும் ஸ்ரீலீலாதான்" - மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருப்வர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகு, பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்துள்ள 'உஸ்தாத் பகத் சிங்' படம் உருவாகியிர... மேலும் பார்க்க